எத்தனை நாள்தான் அடிமை யாக
இருந்து தொலைப்பாய் தமிழா-தில்லி
எத்தனை ஏன்எனத் தட்டிக் கேட்க
என்று துணிவாய் தமிழா!
மொத்தநம் இனமே அழியப் பார்த்தும்
முனகலும் இல்லையே தமிழா-நீ
செத்தவன் போலச் செயல்அற் றாயே
சீ...சீ... கொடுமை தமிழா!
சிறையில் தமிழ்ப்பெண் நளினியின் மானம்
சிதைக்கின் றானே தமிழா - ‘நான்
பெரிய மறக்குடி பிறந்தவன்’ என்னும்
பீத்தல் ஏன்டா தமிழா?
முதியநம் பார்வதித் தாய்அலை கழிந்தார்
மூள்சினம் இல்லை தமிழா-அவன்
முகத்தில் காறித் துப்பவும் நமக்கு
முதுகெலும் பில்லை தமிழா!
முள்வேலி களின் நடுவில் நம்மினம்
முடங்குவ தோடா தமிழா-அந்தக்
கள்வன் இராச பக்சே இங்குக்
கால்வைப்ப தோடா தமிழா!
போரை நிறுத்தச் சொல்லித் தமிழகம்
புலம்பிய தேடா தமிழா-அற்பப்
புழுவாய் அன்றோ நம்மை மதித்தான்
பூண்டறுத் தானே தமிழா!
முல்லைப் பெரியாறு காவிரி பாலாறு
மோசடி நமக்கே தமிழா-அந்தத்
தில்லிக் காரன் எந்நா ளும்நம்
தீராப் பகைவன் தமிழா!
தேசிய இனங்களின் குரலை மதியாச்
செவிட்டுக் காதன் தமிழா-அவன்
சிண்டைப் பிடித்தே ஆட்டினால் தான்
தீர்வு நமக்குத் தமிழா!