1.  என் பேரில் இப்போது கொண்டுவரப்பட்டிருக்கும் வழக்குக்கு ஆதாரமே கிடையாது.

2. வழக்குக்கு அஸ்திவாரமான 29.10.1933 தேதி “குடிஅரசின்” தலையங்கத்தை இப்போது பல தரம் படித்துப் பார்த்தேன். அதை நான் எழுதினேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்.

3. அதில் எழுதப்பட்டிருக்கும் விஷயங்களுக்காவது வாக்கியங்களுக்காவது ராஜத் துவேஷக் குற்றம் சாட்டப்படுமானால் இன்றைய அரசாங்க முறை, நிர்வாக முறை முதலியவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து குறைகளை எடுத்துச் சொல்லவோ, அவற் றால் மக்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களை விலக்கப் பரிகாரம் தேட ஏற்பாடு செய்யவோ யாருக்கும் சுதந் தரம் கிடையாது என்றுதான் முடிவு செய்யப்பட்டதாகும்.

4. என்ன காரணத்தைக் கொண்டு என்மேல் ஆதார மற்ற இந்தப் பிராது தொடரப்பட்டிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், என்னுடைய சமதாமப் பிரச்சாரத்தை நிறுத்திவிடச் செய்வதற்காக முதலாளி வர்க்கமோ, அல்லது மத சம்பிரதாயக்காரர்களோ செய்த சூழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது. வியாசத் தின் விஷயத்திலாவது, பதங்களிலாவது நோக் கத்திலாவது சாட்டப்பட்ட குற்றத்தின் அமைப்பே கிடையாது.

5. முக்கியமாய் அதில் சொல்லப்பட்ட விஷயம் எல்லாம் கல்வி இலாக்காவின் சம்பளங்கள் அதிகமென்றும், பிள்ளைகளுக்குக் கல்விச் செலவு அதிகமென்றும், அதற்கேற்ற பயன் விளைவதில்லை என்றும், ஏழைகளுக்குக் கல்வி பரவ சவுகரியம் இல்லை என்றும், இப்படிப்பட்ட முறையால் இலாபம் பெரும் பணக்காரர்களும் அதிகார வர்க்கத்தாரும் உத்திய கோஸ்தர்களும் சொல்லுவதைக் கேட்டு ஏமாந்து போகாமல் வரப்போகும் (சீர்திருத்த) எலெக்ஷன் களில் ஜாக்கிரதையாய் நடந்துகொள்ள வேண்டும் என்று ஏழை பொது ஜனங்களுக்கு எடுத்துக்காட்டிய தேயாகும்.

6. நான் 7, 8 வருஷ காலமாய் சுயமரியாதை இயக்க சமதர்ம பிரச்சாரம் செய்து வருகிறேன். சமூக வாழ்விலும் பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டுமென்பது அப்பிரச் சாரத்தின் முக்கியத் தத்துவமாகும்.

7. நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை நாட்டு மக்கள் யாவரும் சமமாய் அனுபவிக்க வேண்டும் என்பதும், அவ்வுற்பத்திக்காகச் செய்யப்பட வேண்டிய தொழில்களில் நாட்டு மக்கள் எல்லோரும் சக்திக் குத் தக்கபடி பாடுபட வேண்டும் என்பதும் அத்தத் துவத்தின் கருத்தாகும்.

8.அவ்வியக்க இலட்சியத்திலோ, வேலைத் திட்டத் திலோ, பிரச்சாரத்திலோ, அதற்காக நடைபெறும் ‘குடிஅரசுப்’ பத்திரிகையிலோ பலாத்காரம், துவேஷம், இம்சை இடம்பெற்றிருக்கவில்லை. எந்தவிதத்தி லாவது அவை நமது நாட்டில் இடம்பெறுவது என் பதும் எனக்கு இஷ்டமான காரியம் அன்று.

9. இதற்கு அத்தாட்சி வேண்டுமானால் பல வருஷங் களாக இரகசியப் போலீஸ் இலாக்கா, சுருக்கெழுத்து அறிக்கைக்காரர்கள் எனது பிரசங்கத்தை விடாமல் குறித்து வைத்திருக்கும் அறிக்கைகளையும், சுமார் பத்து வருஷத்திய “குடிஅரசு” பத்திரிகையின் வியாசங்களையும் சர்க்கார் கவனித்து வந்தும் என்மேல் இத்தகைய வழக்கு இதற்குமுன் ஏற்படுத் தியதில்லை என்பதே போதும்.

10. அரசாங்கமானது முதலாளித்தன்மை கொண்ட தாய் இருப்பதால் அது இத்தகைய சமதர் மப் பிரச்சாரம் செய்யும் என்னையும் எப்படி யாவது அடக்க வேண்டுமென்று முயற்சி எடுத் துக் கொண்டிருப்பதில் அதிசயமில்லை. தற் கால அரசாங்க ஆட்சியில்பங்குபெற்றுப் போகபோக்கியமும், பதவியும், அதிகாரமும் அடைந்துவரும் பணக்காரர்களும் மற்றும் மதம், சாதி, படிப்பு என்கிற சலுகைகளைக் கொண்டு முதலாளிகளைப் போலவே வாழ்க்கை நடத்துகின்றவர்களும் இப்படிப்பட்ட அரசாங் கத்திற்கு நேர்முகமாகவும், மறைமுகமாக வும் உதவிசெய்து தீரவேண்டியவர்களாய் இருப்பதால் அவர்களும் இம்முயற்சிக்கு அனு கூலமாய் இருப்பதிலும் அதிசயமில்லை.

11. பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கையில் கடவுள் செயல் என்றும் இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலைநிறுத்தப்பட்டு நடைபெற்றுவரும் சமூக அமைப்பையும் பொருளாதார முறையையும் மாற்றுவது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரியமாய் இருந்தாலும், அவற்றை மாற்றி அமைத்தா லொழிய மக்கள் வாழ்க்கைகளில் உள்ள அநேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த்தி யாகி சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாது என்பது எனது உறுதி.

12. இப்படிப்பட்ட ஒரு மாறுதல் உண்டாக ஆசைப் படுவதும் அதற்காக பலாத்காரம், துவேஷம், இம்சை ஆகியவைகள் இல்லாமல் பிரச்சாரம் செய்வதும் குற்றமாகாது.

13. ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரச்சாரம் பரவ வேண்டுமானால் அக்கொள்கையில் இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய்க் கஷ்டத்தைக் கோரி எடுத்துக் கொள்ளக்கூடாது என்றாலும், தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப் பத்தை யாரும் இழந்துவிடக்கூடாது. இந்தப் பிரச்சாரத்தைத் தடுக்க வேண்டுமென்று கருதி இந்த வழக்கைக் கொண்டு வந்திருக்கிறார் கள். ஆதலால் அவர்கள் எப்படியாவது எனது வியாசத்தில் துவேஷம், வெறுப்பு, பலாத்காரம் முதலியவை இருப்பதாகக் கற்பனை செய்து தீரவேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். அந்தப் படி செய்யப்படும் கற்பனைகளால் நான் தண்டிக்கப்பட்டாலும் பொதுவாக என் மீது நம்பிக்கையும் நல்ல எண்ணமும் உடையவர் களும் சிறப்பாக எனது கூட்டு வேலைக்காரத் தோழர்களும் தப்பான அபிப்பிராயம் கொள் ளக்கூடுமாதலால் அப்படிப்பட்ட கற்பனை களை மறுத்து உண்மையை விளக்கிவிட வேண்டுமென்றே இந்த ஸ்டேட்மெண்டைக் கொடுக்கக் கடமைப்பட்டவனானேன்.

14. இதனால் பொதுஜனங்களுடைய கவனிப்பு இன்னும் அதிகமாவதோடு அவர்களது ஆதர வும் பெற நேர்ந்து கிளர்ச்சிக்கு பலமேற்படக் கூடுமாதலால் என்மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில் ஒரு ஸ்டேட்மெண்டை மாத்திரம் கொடுத்துவிட்டு எதிர்வழக்காடாமல் இப்போது கிடைக்கப் போகும் தண்டனையை மகிழ்ச்சி யோடு வரவேற்கின்றேன்.

15. இந்நிலையில் சர்க்கார் என்னைத் தண்டித்தா லும் சரி, அல்லது இந்தப் பிராதுக்குப் போதிய ஆதாரமில்லை என்று நியாயத்தையும் சட்டத் தையும் லட்சியம் செய்து வழக்கைத் தள்ளி விட்டாலும் சரி, இப்படிப்பட்ட அடக்குமுறையை வரவேற்குமாறு எனது தோழர்களுக்கு வழி காட்ட எனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறேன்.

- புரட்சி 21.01.1934

Pin It