தமிழ் மொழியின் வேரில் பாயும்
தஞ்சை ஊற்று நீ - என்
தமிழினத்தின் மீது தவழும்
தென்றல் காற்று நீ!
இருள் படர்ந்த காலத்திலே தமிழர்கள் மேலே - நீ
எழுகதிராய் கண் சிவந்தாய் பூமியின் மேலே
தமிழர் கூட்டம் தத்தளிக்கும் அலைகடல் மேலே - நீ
தவழ்ந்து சென்று துயர்சுமந்தாய் தோணியைப் போலே - நீ
தவழ்ந்து சென்று துயர்சுமந்தாய் தோணியைப் போலே!
- தமிழ் மொழியின்
தந்தை பெரியாருக்குத் தொண்டன் ஆனவன் &- என்றும்
தலை நிமிர்ந்து அவரை ஏற்றுப் பயணம் செய்தவன்
தமிழிசையால் மன்றம் கண்டாய் பெரியாருக்கு -
தமிழ் நிலத்தில் அந்தப் புகழ் வேறு யாருக்கு? - இந்த
தமிழ் நிலத்தில் அந்தப் புகழ் வேறு யாருக்கு?
- தமிழ் மொழியின்
இல்லையென்று சொன்னதில்லை உனது வாய்மொழி& - அய்யா
எத்தனையோ குடும்பங்களில் உனது விளக்கொளி!
கோடி கோடியாய்க் கொடுத்த கண்ணபுரத் தாய் &- தமிழை
கோபுரத்தில் ஏற்றி வைக்கக் கொட்டிக் கொடுத்தாய்& - தமிழை
கோபுரத்தில் ஏற்றி வைக்கக் கொட்டிக் கொடுத்தரய்!
- தமிழ் மொழியின்
தானுயர்ந்து தமிழுயரக் கொடுத்த பெருமகன் - திரு
நாராயண -& ஞானாம்பாள் பெற்ற திருமகன்
ஆனா ரூனா என்பதொரு வாழ்வியல் வேதம் - எங்கள்
அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும் - எங்கள்
அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்!
- தமிழ் மொழியின்
தமிழ்ச் சான்றோர் பேரவை
தந்தை பெரியார் தமிழிசை மன்றம்
நந்தன்&மாதம் இருமுறை இதழ்
ஆகியனவற்றை உருவாக்கியவரும்,
கட்சிகளைக் கடந்து
தமிழின உணர்வாளர்களை
ஒரு குடையின் கீழ்
ஒருங்கிணைத்தவருமான
அய்யா நா.அருணாசலத்தின் மறைவு
உண்மையாகவே
ஈடுகட்ட முடியாத இழப்புதான்!