நெஞ்சில் நெருப்பேந்தி
நெடுகப் போராடி
வஞ்சகர் போர்க்களத்தில்
வாழ்வைப் பலியிட்டு
எரிந்து போனார்கள்
எங்கள் மாவீரர்
களத்தில் போராடிக்
காற்றில் கலந்தார்கள்
மண்ணின் விடுதலைக்காய்
மண்ணில் புதைந்தார்கள்
களத்தை இழந்தாலும்
கனவை மறக்கவில்லை
காலம் விடைசொல்லும்
கனியும் தமிழீழம்!!
-------------------
1957 நவம்பர் 26 - சாதியைக் காப்பாற்றும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எரித்துவிட்டுத் தந்தை பெரியார் 4 ஆயிரம் தெண்டர்களுடன் சிறை புகுந்த நாள்.
“நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்
நம் சட்டம் சாதி காப்பாற்றும் சட்டம்
நம் இலக்கியம் சாதி காப்பாற்றும் இலக்கியம்”
- என்றார் பெரியார்.