சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.சின் கருவியாக ஆடிக்கொண்டிருக்கும் அன்னா ஹசாரே என்ற மனிதரின் ஒரே அடையாளம் அவர் அணிந்திருக்கும் காந்தி குல்லாய். அவருடைய துணை அடையாளம், கண்ணுக்குத் தெரியாத காவி உடை.
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சட்டத்தின் மூலம் மட்டுமே ஒழித்துவிட முடியாது என்றாலும், சட்ட நடைமுறைகளும் தேவைதான். அன்னா ஹசாரே லோக்பால் குறித்த சட்ட நடைமுறை பற்றி மட்டும் கவலைப்படவில்லை. பிரதமரைப் பற்றியே கூடுதலாகக் கவலைப் படுகிறார்.
ஊழலை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டு, விளம்பர வெளிச்சத்தில் மின்ன வேண்டும் என்னும் ஆசை அவருக்கு வந்துவிட்டது. அதனால்தான் எந்த வரைவு மசோதா பற்றியும் விவாதிக்காமல், தான் எதற்கும் அஞ்சாதவன் என்னும் வதந்தியை மட்டுமே விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார். வரும் 3ஆம் தேதி நாடாளுமன்றத்தில் லோக்பால் வரைவுச் சட்டம் முன்வைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை விவாதித்து, பிறகு அது பற்றிய முடிவை எடுப்பதே விவேகமாகும். அன்னா ஹசாரேயோ 16ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் உறுதி என்று அறிவிக்கிறார். அப்படியானால் லோக்பால் வரைவுக் குழுவில் அவர் இடம் பெற்றிருக்க வேண்டிய தேவையே இல்லை. எல்லாவற்றையும் உண்ணாவிரதம் மூலமே ஒழித்துக் கட்டியிருக்கலாம்.
மத்திய அரசு நாடாளுமன்றம் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு விதித்திருக்கிறது. தடையை மீறுவேன் என்கிறார் ஹசாரே. அதே பேட்டியில், அடுத்த நிமிடம், தடையை எதிர்த்து உச்சநீதி மன்றம் செல்வேன் என்கிறார். உடனடியாக, உண்ணாவிரதத்தில் தடியடி நடத்தினாலும் கவலைப்பட மாட்டேன் என்கிறார்.
பாவம், ஊடகங்களால் உருவாக்கப்பட்ட திடீர் மகாத்மா நிரம்பவே குழம்பிப் போயிருக்கிறார் என்பது தெரிகிறது.
தடையை மீறுகிறவர் ஏன் நீதிமன்றம் செல்கிறார்? நீதிமன்றம் செல்வது என்று முடிவெடுத்தால், பிறகு ஏன் தடையை மீறுகிறார்?
தடியடி கண்டு அஞ்சமாட்டேன், துப்பாக்கிக்கு மார்பு காட்டுவேன் என்றெல்லாம் நம் தமிழ்த் திரைப்படக் கதாநாயகர்களைப் போல பொரிந்து தள்ளுகிறார் ஹசாரே. உள்மனத்தில் அவருக்கு ஓர் எண்ணம் இருக்கிறதோ என்று ஐயமாய் உள்ளது. தடியடி நடந்து, கலவரம் மூண்டு யாராவது அப்பாவித் தொண்டர்கள் சிலர் காயப்பட்டால், அது தன் உண்ணாவிரதத்திற்கு மேலும் விளம்பரம் சேர்க்கும் என்று எண்ணுகிறாரோ என்னவோ? அடடே, காந்தியின் சீடர் வன்முறையின் காதலராக அல்லவா இருக்கிறார்.
மத்திய அரசும் லோக்பால் சட்டத்திற்கு பிரதமரும் உட்பட்டவரே என்று சொல்ல ஏன் தயங்க வேண்டும்? பிரதமரானாலும், நீதிபதிகளானாலும் வானத்திலிருந்து குதித்தவர்கள் இல்லை. சட்டத்தின் வரம்புக்கு உட்பட்டவர்களே என்னும் போது ஏன் இந்தத் தயக்கம் என்னும் கேள்வி மக்கள் மனத்தில் எழவே செய்கிறது.
நாட்டில் உள்ள பொதுவான எண்ண ஓட்டத்தைப் புரிந்து செயல்படுவதே அரசுக்கு அழகு. இல்லையயனில் ஹசாரே போன்ற விளம்பரம் விரும்பிகளுக்கே அது பயன்படும் என்பதை அரசு கவனத்தில கொள்ள வேண்டும்.
அன்னாவால் நடத்தப்படும் போராட்டம் சாத்வீகப் போராட்டம் என்பதை வைத்துமட்டுமோ அல்லது அவர் ஊழலை ஒழிக்க நல்ல மனம் படைத்தவர் என்று மட்டுமோ வைத்து இந்த இயக்கத்தை மதிப்பிட்டீர்கள ் என்றால் நாம் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் சந்திக்கப்போவதி ல்லை.
ஊழலில் மேல் மட்டத்திலிருந்த ு ஒழிப்பதா அல்லது கீழ் மட்டத்திலிருந்த ு ஒழிப்பதா என்பதோ, அல்லது நாம் சுத்தமாயிட்டு ஒழிப்பதா என்பதல்ல இங்கு விவாதம்.
மக்கள் மனங்களில் இந்த நாற்றமெடுத்த, புறையோடிப்போன சமூகத்தை மாற்ற வேண்டும் என்று இந்தியா முழுவதும் எண்ணுக்கிறார்கள ். ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதுதான். அதுமட்டுமல்ல சரியான எதிரியை எவ்வாறு இனம் காண்பது என்பதில்தான் வெற்றியும் அடங்கியிருக்கிற து. இல்லையென்றால் நிழலோடு, அட்டைக் கத்தியில் சண்டையிட்டதுதான ் நடக்கும். அவ்வளவு முட்டாளாக நாம் இருக்கப்போகிறோம ா என்பதும் நாம் சிந்திக்க வேண்டும். நல்ல எண்ணங்களே சமூக மாற்றத்தை உருவாக்கிவிடுவதில்லை.
ஊழல் இன்று தனியார்மயம், தாராளமயம் வந்தபிறகு சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட ்ட விசயமாக ஆகிவிட்டதை நீங்கள் கவனிக்க தவறிவிட்டவர்களா கவிட்டீர்கள்.
அதற்கான சில விசயங்கள்
பல்வேறு வெளிநாட்டு, உள்நாடு பெரிய கம்பெனிகள் இங்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்று ஒன்றை ஆரம்பித்திருக்க ிறார்கள். அதற்கு அரசு கொடுத்த பெயர் சிறப்பு பொருளாதார மண்டலங்கள். ஆனால் அதற்கு நிலத்தினை விவசாயிகளிடமிரு ந்து 5 லட்சத்துக்கு பிடுங்கினால் அதை அந்த கம்பெனிகளுக்கு 20 லட்சத்துக்கு விற்கிறார்கள் இடைதரகர்கள் அரசுகள். ஆனால் அந்த கம்பெனியே அதை வாங்கவேண்டும் என்றால் அதன் மார்க்கெட் மதிப்பு என்ன தெரியுமா 50 லட்சத்திற்கு குறைவில்லாமல் இருக்கும். இதில் அந்த கம்பெனிக்கு 30 லட்சம் லாபம் இடைதரகர்களுக்கு 15 லட்சம் லாபம். இதற்குப் பிறகு அவர்களுக்கு நமது வரிப் பணத்தில் 50 பைசா யூனிட்டில் கரண்ட், இலவச குடிநீர் வசதி, 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வரி கிடையாது. இவ்வளவும் நம் பணத்தில். பொருளாதாரநெருக் கடி என்கிறார்கள், அப்படியென்றால் கம்பெனி வருவாய் குறைந்து போவதைத்தான் அப்படி கூறுகிறார்கள். அதற்கு நமது மன்மோகனும், பிரனப் முகர்ஜியும், என்ன கூறுகிறார்கள் தெரியுமா, எல்லா விலையேற்றங்களைய ும், எல்லா மக்கள் மீதான வரிகளையும் பொருத்துகொள்ளுங ்கள் என்கிறார். அதன் பொருள் எந்த நிலையிலும் கம்பெனிகளுடைய வருமானம் குறையக் கூடாது, அவர்கள் லாபத்தை குவித்துக்கொண்ட ே இருக்கவேண்டும் என்கிறார்கள்.
2ஜி யை எடுத்துக்கொள்ளு ங்கள், அதில் 1,75,000 கோடி நட்டம் என்றார்கள். அதில் கமிசன் அல்லது லஞ்சம் அரசியல் வாதிகளுக்கு 10 முதல் 30 சதவீதம் மீதி 70 சதவீதம் கம்பெனிகள்தானே அனுபவிக்கிறது.
கனிம ஊழலை எடுத்துக்கொள்ளு ங்கள் இந்தியா முழுக்க 27,00,000 கோடி (27லட்சம் கோடி)கொள்ளையடிக ்கப்பட்டிருப்பத ாக கூறுகிறது, அதாவது அரசுக்கு நஷ்டம் என்று கூறுகிறது. இதற்கு கட்சி வித்தியாசம் பார்க்காமல் எல்லா மாநிலங்களிலும் கமிசன் அல்லது லஞ்சம் அல்லது ஊழல் 10 முதல் 30 சதவீதம் அரசியல்வாதிகளுக ்கு, மீதி கம்பெனிகள்தான் கொள்ளையடித்தது.
நம் பூமியில் கிடைக்கும் தாதுக்கள், பெட்ரோல் போன்ற எண்ணை வளங்கள் எல்லாம் மிகக் குறைந்த விலையில் எந்த முதலீடும் இல்லாமல் நமது பேங்கிலேயே லோன் எடுத்துக்கொண்டு அதை வாங்கி கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் இந்த கம்பெனிகள்.
இறுதியாக நான் கூறுவது, இந்த லஞ்சம் யாருக்காக உருவாக்கப்பட்டத ு. இது போன்ற கம்பெனிகள் கொள்ளை லாபம் அடிப்பதற்காக. எப்பொழுது (1992 ஆம் ஆண்டு) தனியார்மயம், தாராளமயம் எடுத்து வந்தார்களோ அப்போதுதான் இந்த லஞ்சத்தின் பரிணாமம் சைபர்களை கணக்கிடமுடியாத அளவுக்கு பெருகியது. காரணம் இந்த கம்பெனிகளின் லாபத்தை கொள்ளையை பெருக்குவதற்காக அவர்களாக ஒரு பங்கை வாங்கிக்கொண்டு சேவை செய்தார்கள். அவர்கள் அதாவது கம்பெனிகள் அதற்காக ஆட்சியையே கூட மாற்றி அமைத்தார்கள். ஆட்சியில் யார் உட்காரவைப்பது என்பதையும், யார் தேர்தலிலே நிற்பது என்பதையும் கூட அந்த கம்பெனிகளுக்கிட ையே நடக்கும் போட்டியே தவிர, நாம் யாரும் இவர்கள் தான் நிற்கவேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை , வெறும் நிற்பவர்களை வேறு வழியில்லாமல் எந்த கொள்ளி நல்ல கொள்ளி என்று எடுத்து சொரிந்து கொண்டதைத் தவிர.
அதனால்தான் கூறுகிறோம் லஞ்சத்தை ஒழிப்பது என்பதின் முதல் படி இந்த தாரளமய, தனியார்மய, உலகமய கொள்கைகளை எப்போது ஒழிக்கிறோமோ அப்போதுதான் சாத்தியமாகும். அதிலும் இதில் வரும் பணம் நம் நாட்டில் கூட உலாவது இல்லை. இவையெல்லாம்தான் வெளிநாட்டில் கருப்புப் பணமாக பதுக்கிவைப்பதாக ும்.
ஆனால் நாம் அன்றாடம் சந்திக்கும் அரசு அலுவலகங்களில் வாங்கும் லஞ்சம் இங்கேயே தான் நடமாடுகிறது. தாசில்தாரருக்கு கீழேயும், இன்ஸ்பெக்டருக்க ு கீழேயும், சாதாரண இடங்களிலேயும் வாங்கும் லஞ்சம் உள்நாட்டிலேதான் சுற்றுகிறது. ஆனால் பெரிய கம்பெனிகளிடம் வாங்கும் லஞ்சம் கருப்புப் பணம், அது நாட்டை காட்டிக்கொடுக்க ும் பணம், அதை ஒழிக்காமல் உள்நாட்டில் இருக்கும் லஞ்சத்தை ஒழிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாட்டை காட்டிக்கொடுப்ப தை, கொள்ளையடிப்பதை, கூட்டிக்கொடுப்ப தை தடுக்கப்போகிறாம ா என்பதே. இதுதான் சுதந்திரப்போராட ்டம் என்பது. இதை எதையுமே அன்னா ஹசாரே கூறினாரா. உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன ். எய்தவன் இருக்க அம்பை தடுத்து பயனென்ன, ஆக்கியவன் இருக்க பொம்மையை உடைத்து பயனென்ன. ஆகையால் பிரதமரையும், நீதிபதிகளையும், கொண்டுவருவதைவிட முதன்மையான பணி பலனடைந்த கம்பெனிகளை முடக்கினால் அதற்கு அவர்களுக்கான தண்டனையை பற்றிக் கூறாமல் வெறுமென பேசுவது நிழலோடு மோதுவதே. வாங்குபவருக்கும ், கொடுப்பவருக்கும ் சேர்த்தேதான் தண்டனைதரவேண்டும ். அதுதான் முதல் படி. அதிலும் இன்று உலகமய, தாராளமய, தனியார்மய கொள்கைகளை ஒழிக்காமல் இதை ஒரு இம்மியளவும் ஒழிக்கமுடியாது. பாம்பின் பல்லை பிடுங்க இதுதான் வழி.விவாதம் தொடரும்....
RSS feed for comments to this post