தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி, மரண தண்டனை எதிர்ப்புக் கூட்டமைப்பைச் சேர்ந்த 1000 இளைஞர்கள் சென்னையி லிருந்து வேலூர் சிறை நோக்கி இரு சக்கர வாகனப் பேரணியை கடந்த 18 ஆம் தேதி நடத்தினர். நடிகர் சத்தியராஜ், இயக்குனர் மணிவண்ணன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். காலை 8 மணிக்கு தொடங்கிய பேரணி, பிற்பகல் 3.30 மணிக்கு வேலூர் சென்றடைந்தது. வழி நெடுக பேரணிக்கு ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், காஞ்சி மக்கள் மன்றம் போன்ற அமைப்புகள் வரவேற்பு தந்தன. கூட்டமைப் பின் பிரதிநிதிகளும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேரறிவாளன் தந்தை குயில்தாசன், மாணவர் நகலகம் அ. சவுரிராசன் உள்ளிட்டோர் சிறையில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை சந்தித்தனர். தமிழக முதல்வர் தூக்குத் தண்டனைக்கு எதிரான தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வருவார் என்று தங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது என்றும் அது ஒன்றுதான் தங்களை தூக்குக் கயிற்றிலிருந்து காப்பாற்றக்கூடிய வழி என்றும் பேரறிவாளன் கூறினார்.
பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011
தமிழக முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்: பேரறிவாளன் நம்பிக்கை
- விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2011
More articles by விடுதலை இராசேந்திரன்
- பெருகி வரும் கோயில் கொள்ளைகள் (22 ஜூன் 2026)
- அம்பேத்கரைத் திரிக்கும் பார்ப்பனியம்! (22 ஜூன் 2026)
- பள்ளிகளில் ஜாதிக் கயிறுகளுக்குத் தடை! (22 ஜூன் 2026)
- ஜாதி ஒழிப்பை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு (22 ஜூன் 2026)
- தென் மாநிலங்களை ஓரம் கட்டும் ஒன்றிய அரசு (12 ஜூன் 2026)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.