பயணம் முடிந்த இடம் நிற்கிறேன் -எதிரே
பாழ்வெளி கிடந்து சிரிக்குதடி -மேலும்
எட்டியோர் அடிவைக்க நிலம் இல்லை
இலக்கோ இதுவரை கண்ணில் படவில்லை
ஒருநாள் இருநாள் விரயம் ஜீரணம் செய்யலாம்-இங்கு
வாழ்வே விரயம்! - என்ன கணக்கடி சிங்கி

பயணம் முடிந்த இடத்திலொரு கொடியை நடு-சிங்கா
பயணமே வெற்றிதான்! கொண்டாடு!
நடக்கப்பயந்து இருந்தவர் மட்டும்தான் -என்றும்
வாழ்வைத்தொலைத்தவர் தோழா!

-ஜெயந்தன் எழுதிய கவிதை

சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் ஜெயந்தனுக்கு அஞ்சலி செலுத்தி  அவர் எழுதிய கவிதையை  இங்கு தருகிறோம்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.