முருக பூபதியின் "குற்றம் பற்றிய உடல்' நாடகத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்

ஆளும் உடைமை வர்க்கத்தின் அதிகாரக் கூர்நகங்கள் பரவியிருக்கும் இப்பொதுவெளிச் சமூக அமைப்பில், வாழ்தலின் இருப்பிற்காக ஏதோ ஒருவகையில் போராடிக் கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கிறது. அதிகார அமைப்புகளின் எல்லைகளுக்குட்பட்ட மனித வெளியை அடிமைகளின் கூடாரமாகவே அவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் உலாவித் திரியும் நிராயுதபாணிகளாக வும், அதிகார மட்டங்களில் சுரண்ட லுக்கான சேவகர்களாகவும் இங்குள்ள மனிதர்கள் மாற்றப்பட வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாகச் செயலாற் றுகின்றன அதிகாரத்தை தம்மகத்தே குவித்துக் கொண்டுள்ள முதலாம் உலக நாடுகள்.

உலக நாடுகள் அனைத்தின் மீதான அதிகாரத்தையும் செலுத்தத் துடித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய நாடுக ளின் கொடுங்கரங்களால் மூன்றாம் உலக நாடுகளின் அரசியல், பொருளி யல், நிலவியல், வாழ்வியல், பண்பாட் டியல் போன்ற அனைத்துக் கூறுகளும் சிதைவுகளுக்கு உள்ளாகி வருகின்றன. மூன்றாம் உலக நாடுகள் மீதான சுரண் டலையும், அந்நாடுகள் மீதான அதி காரத்தையும் நிலைநாட்டுவதற்கென உருவாக்கப்பட்ட உலகமயக் கொள் கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏகாதிபத்திய நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. ஏகாதிபத்தியங்களின் உலகமயக் கொள்கைகளை மூன்றாம் உலக நாடுகளும், அந்நாடுக ளில் உள்ள தேசிய இனங்களும் ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கான நிர்ப்பந்தங் களை அவை ஏற்படுத்துகின்றன.

ஏகாதிபத்திய நாடுகளின் சுய இலா பத்திற்காகவும், சுரண்டலுக்காகவும் உருவாக்கப்பட்ட உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, சர்வதேச நிதி ஆணையம் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களின் மூலமும், பொருளா தாரத் தடை, ஆக்கிரமிப்பு, போர் போன்ற நடவடிக்கைகளாலும் இவ் வுலகமயக் கொள்கை மூன்றாம் உலக நாடுகள் மீது புகுத்தப்படுகின்றது. மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் ஏகாதிபத்திய நாடுகளின் அதிகாரத் திற்கு உட்பட்டும் அடிபணிந்தும் இருப்பதோடு மட்டுமல்லாமல், ஏகாதிபத்திய நாடுகளின் சுரண்டலுக் கான திறந்தவெளிச் சந்தையாகவும் மூன்றாம் உலகநாடுகள் மாற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஏகாதி பத்திய நாடுகளின் பன்னாட்டு நிறு வனங்களின் உலகமயக் கொள் கையை பெரும்பாலான மூன்றாம் உலக நாடுகள் புதுக் காலனியமயமாகி வருகின்றன.

மூன்றாம் உலக நாடுகள் புதுக்கால னிய நாடுகளாக மாற்றப்பட்டாலும், இப்புதுக்காலனியத்திற்கு எதிரான போக்குகளும் போராட்டங்களும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள பெருவாரியான மக்களிடம் காணப் படுகின்றன. ஏகாதிபத்தியங்களின் புதுக்காலனிய நடைமுறைகளால் மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள், உற்பத்தி நடவடிக்கைகள், உணவு ஆதாரங்கள், பண்பாட்டுக் கூறுகள், சுய அடையாளங்கள், அரசி யல் கூறுகள், வாழ்வியல் முறைமை கள், அந்தந்த தேசிய இனங்களின் மரபுகளும் வேர்களும் அழிவுக்கும் திரிபுகளுக்கும் உள்ளாகி வருகின்றன. அதே வேளையில், தத்தமது இருப்பு களையும் அடையாளங்களையும் காத்துக் கொள்வதற்கும் மீட்டுக் கொள்வதற்கும் போராடிக்கொண்டே தான் இருக்கின்றனர்.

புதுக்காலனியத்திற்கு எதிரான போராட்ட உணர்வும் பங்களிப்பும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதா வது ஒரு வகையில் வெளிப்பட்டுக் கொண்டிருப்பவை. புதுக்காலனிய எல்லைக்குள் இருத்தி வைக்கப்பட் டிருக்கும் மனிதர்களின் எதிர்ப்பு, வடிவங்கள் பலவகைப்பட்டவை. ஒவ்வொரு மனிதரும் தாம் சார்ந்த தமக்குத் தெரிந்த தம்மோடு உற வாடிக் கிடக்கிற கூறுகளின் வழி யேயும் புதுக்காலனியத்திற்கு எதிரான உணர்வை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். புதுக்காலனிய அதிகார அமைப்பில் வாழ நிர்ப்பந் திக்கப்பட்ட அதே சமயத்தில், வாழ் வையும் பொழுதையும் தமக்கு இலகு வான கலைக்கென்று ஒப்பளித்துக் கொண்ட ஒவ்வொரு கலைஞரும் புதுக் காலனியத்திற்கு எதிரான கூறு களைத் தமது கலைகளின் வழியாக வும் வெளிப்படுத்தக் கூடும். தமது கலை வடிவங்களையே போராட்டங் களுக்கு உதவக்கூடிய கருவிகளுள் ஒன்றாக ஆக்க முடியும்.

எண்ணெய் வளச் சுரண்டலுக்காகவே ஈராக் நாட்டின் மீது வலுக்கட்டாய மாகப் போர் தொடுத்து, அமெரிக்க இராணுவப் படைகளால் ஈராக் மண் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டது. அங்குள்ள இலட்சக்கணக்கான ஈராக் மக்களைக் கொன்றொழித்தும், எஞ்சி யுள்ள ஈராக்கியர்களை வதை முகாம் களில் அடைத்து வைத்தும் வன் முறையைக் கட்டவிழ்த்து விட்டது அமெரிக்கப் படை. மேலும், ஈராக் பெண்களை அபுகிரைப் சிறைச்சாலை களில் அடைத்து வைத்து, ஆக்கிர மிப்புப் படை வெறியர்களால் வன் புணர்ச்சி செய்யப்பட்டது. ஈராக் மக்கள் அனைவரையும் ஈராக் மண் ணிலேயே அகதிகளாக்கியதோடு, ஈராக் மண்ணின் அடையாளங்கள் யாவும் முற்றாகச் சிதைக்கப்பட்டன. தம் இனத்தின் எச்சங்களையும் பாரம் பரியத் தடங்களையும் அடைகாத்துப் பாதுகாத்து வந்த ஈராக் மக்களின் பாக்தாத் அருங்காட்சியகத்தின் துகள் களைக் கூட எரித்துச் சாம்பலாக்கின ஆக்கிரமிப்புப் படைகள்.

அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகளால், அமெரிக்கா வின் மீதான எதிர்ப்புணர்வு ஈராக் நாட்டுக் குழந்தைகளிடத்தும் காணப் பட்டது. அவர்களில் "அமெரிக்கா' என்றும் "புஷ்' என்றும் கிறுக்கப்பட்ட எழுத்துக்களின் மீது மூத்திரத்தைப் பீய்ச்சி அடித்ததன்மூலமும் தமது எதிர்ப்புணர்வைக் காட்டினர். (தற்போது அமெரிக்க புஷ் ஈராக் வந்த போது தனது புதைகால் செருப்பை புஷ் மீது வீசிய முண்டாசின் எதிர்ப் புணர்வும் இங்கு நினைவு கூரத் தக்கது) ஈராக் மட்டுமல்லாமல், மூன்றாம் உலக நாடுகள் அனைத்தை யும் உலகமய நடவடிக்கைகள் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுக ளின் மீதான எதிர்ப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

ஈராக் நாட்டின் பாக்தாத் அருங் காட்சியகம் அமெரிக்கப் படைகளால் அழிக்கப்பட்டபோது, கலைகளை மட்டுமல்லாமல் மனிதத்தை நேசிக் கக்கூடிய கலைஞர்களிடத்தும் பெருங் கொதிப்பு இருந்தது. பழமைமிக்க பாரம்பரியச் சுவடுகள் நிறைந்த பாக்தாத் அருங்காட்சியகம் அழிக்கப் பட்ட அந்த நாளின் இரவு முழுவதும் தனது அம்மா, அக்கா, தங்கை உடுத் திய பழைய சேலை, தாவணி, பாவாடைத் துணிகளைக் கொண்டு 76 பொம்மைகளைச் செய்தவர் முருக பூபதி என்னும் நாடகக்காரர். "ஒரு பொம்மையை அழித்தால் பல நூறு பொம்மைகளை உருவாக்குவேன்' என வெளிப்பட்ட உணர்வு, அமெ ரிக்க எதிர்ப்பால் மட்டும் வந்ததல்ல; மக்களையும் மண்ணையும் கலைக ளையும் நேசித்ததாலும் வெளிப்பட்ட உணர்வாகும்.

முருகபூபதியின் பெரும்பாலான நாடகங்கள் மண் சார்ந்த அடையாளங்களையும், ஆதி மக்களின் தொன்மக் கூறுகளையும் மீள்உருவாக்கம் செய்யும் தன்மை கொண்டவை. நகரத்தின் சாயல்படாத கிராமங்களுக்குள்ளும் கட்டிடங்கள் முளைக்காத காடுகளுக் குள்ளும் நாடகங்களை நிகழ்த்துவதன் மூலம் நாடகத்திற்கான களம் பார் வையாளர் தளம் நாடக உணர் வோட்டம் என அனைத்துமே கிரா மத்து மண் சார்ந்த கூறுகளுள் ஒன் றோடு ஒன்றாக ஆகிப் போகின்றன. அந்த வகையில், முருகபூபதியின் நாடகங்கள் சூழலியல் அரங்க அழகியலைக் கொண்டவை.

மண் சார்ந்த கூறுகளையும் மண்ணில் உழலும் மக்களின் வாழ்வியல் பதிவு களையும் வெளிப்படுத்துவதற்கு ஏது வாக, மண்ணோடும் மக்களோடும் உறவாடிக் கிடக்கிற மொழிப்பதிக ளையும் சடங்கியல் ஆட்டமுறைகளை யும் மிக நுட்பமாகவும் குறியீடுகள் வழியாகவும்வெளிப்படுத்தும்பாங்கில் முருகபூபதியின் நாடக பாணி அமைந்திருக்கின்றது.

முருகபூபதியின் பனுவல் மற்றும் நெறியாளுகையில் அண்மையில் நிகழ்த்தப்பட்ட அவரின் நாடகம் "குற்றம் பற்றிய உடல்'. "மணல்மகுடி' தயாரிப்பில் உருவாக்கப்பட்ட இந் நாடகம் புரிசையில் நடந்த கண்ணப்பத் தம்பிரான் நினைவு நாள் விழாவில் அரங்கேற்றப்பட்டு, பின்பு மதுரையிலும் நிகழ்த்தப்பட்டது.

நாடகத்திற்கெனத் தனிமேடையோ, பிரம்மாண்ட அரங்கப் பொருட்களோ எதுவுமில்லை. வெறும் மணற் பரப்பே நாடக நிலமாக மடிவிரித்துக் கிடக்கிறது. நாடக நிலத்தில் சுரக்குடு வைகள் மட்டுமே பரவிக்கிடக்கிறது. அச்சாரக் குடுவைகளை மண்ணில் உரசியபடியே நிலமெங்கும் கோல மிடுகிறார்கள். விதைகளின் உரசல், பூச்சிகள், வண்டுகளின் சப்தங்கள் குரல்வழியாக வெளிப்பட்டன. நிலத் தில் முளைத்த பயிர்ச்செடிகள் துவண்டு துவண்டு விழுவதும், அவற்றைத் தூக்கிப் பறிப்பதுமான படிமங்கள் உடல்மொழிவழியாக வெளிப்படுத்தப்படுகின்றது. நாடக நிலம் சாம்பல் நிறத்தில் மவுனித்துக் கிடக்கையில், அப்பெரு மவுனத்தைக் கிழித்தபடியே வந்த ஒப்பாரிப்பாடல் நாடக நிலமெங்கும் பரவுகிறது.

வாங்கடா மக்கா வரிசையா யென்பிறகே

தண்ணீரென்று சொல்லித் தவிக்குது எல்குழந்தெ...

அன்னமென்று சொல்லி அலையுது பாலரெல்லாம்

தண்ணீர்த் தவளைபோல தானாக மிதந்தலைந்தோம்

பச்சைக்கிளிபோல பறக்கிறோம் பாழ் கிணற்றில்

தாலி பறிகொடுத்தேன்... கூரை பறிகொடுத்தேன்

கணவனைப் பறிகொடுத்து தனிவழி நின்றலஞ்சோம்

தாமரைக் கிள்ளியல்லோ மாவிலை யும் கிள்ளி வந்தேன்

அழுகையொலி நிக்கவில்லை யார் மனசும் சுகமாயில்லை

வேர்முடிக்கும் கூந்தலிலே விற கெடுக்க என் விதியே

எனப் பாடியபடியே ஒருவர் முன் செல்ல, மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்து செல்கின்றனர். நட்டப் பட்ட விவசாயத் தொழிலில் மோச மாக்கப்பட்ட விவசாயிகளின் அழு கையும் மரண ஓலமும்தான் நாடகத் தின் உயிர் என்பதை அந்த ஒப்பாரிப் பாடல் உணர்த்தியது. புதுக்காலனியத் தின் கொடூர நெருக்கடிகளால் பாதிக் கப்பட்டிருக்கும் இருதரப்பினைப் பற்றிய சித்திரமாக நாடகம் விரிகின் றது. விவசாயத் தொழிலோடு மட் டுமே தங்கள் வாழ்வியலைப் பிணைத் திருந்த விவசாயிகளின் தற்போதைய நொருங்கிப் போன வாழ்வியலையும், விவசாயக் கிராமங்களுக்குச் சென்று நாடகம் நிகழ்த்திக் காட்டும் நாடோடிக் கூத்தாடிகளின் கலைந்துபோன வாழ் வியலையும் கண்ணீரும் கம்பலையு மாக விவரித்துச் செல்கிறது நாடகம்.

கிராமம் சார்ந்த மக்களுக்கும், அம்மக் களை நம்பிய கலைஞர்களுக்குமான உறவில் நேசிப்பும் நெருக்கமும் இருந் தன. அறுவடைக் காலத்தில் நாடகம் நிகழ்த்திக் காட்டும் நடிகர்களுக்கு அம்மக்கள் தந்த பரிசுகள் ஏராளம். காட்டுக் கீரைகளையும், வறண்ட நிலங்களில் விளைகிற கனிவகைகளையும், தானியங்களையும் கொண்டு வந்து நடிகர்களுக்குக் கொடுப்பார் கள். ‘சிலர் எங்க முகத்தையே பார்த்துவிட்டு எங்க கண்ணுக்குள்ள மலர்களும் செடிகளும் விருட்சங்க ளும் அசையுதுண்ணு சொல்லி அதைத் தொட்டுற மாட்டோமா...ன்னு எங் களச் சுத்தி சுத்தி வருவாங்க... அந்த ஊர்க் குழந்தைகளிட்ட கோமாளி வேசம் போட்டு வருவேன்னு சொல் லிட்டு வந்தேன். எனக்காக பனை யோலை காத்தாடியெல்லாம் செஞ்சு வச்சிருப்பாங்க...’ என விரியும் நடிகர்களின் அனுபவங்கள் பசுமை நிறைந்த வார்த்தைகளைக் கொண் டவை. நடிகர்களைத் தங்கள் வீட்டில் உள்ள ஒருவராகவே பார்ப்பதுமான வாஞ்சை குணம் பூர்வக் குடிமகளிட மும் விவசாயிகளுடமும் இருந்து வந்தது. ‘எனக்குப் புடிச்ச பெண் வேஷம் கட்டும்போது என் அழகைக் கண்டு விவசாயிகளெல்லாம் ஏமாந்து என் ரெட்டைச் சடைக்குக் கத் தாழைப் பூக்களையும் பெயர் தெரி யாத காட்டு மலர்களையும் கொண்டு வந்து தருவாங்க. சுய மரணம் செய்த பெண்களோட உடுப்புகளையெல் லாம் உடுத்தி நடித்துப் பாடினேன். அப்போ என்னெ அவுங்க வீட்டுப் பெண்ணாத்தான் பார்ப்பாங்க...’ இப்படியான அனுபவங்கள் நடிகர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டதுண்டு. கலைஞர்களுக்கும் விவசாய மக்களுக் குமான இந்த உயிர்ப்பான உறவு தொடர்ந்து நீடிக்க முடியவில்லை.

புவிச் சூடேற்றத்தால் பருவமழை தவறிப்போனது. விளைநிலங்கள் வறண்டு போயின. ஊருக்கு உண வளித்த விவசாயிகள் வறட்சிக்கும் பட்டினிக்கும் உள்ளாகிக் கிடக்கிறார் கள். கிராமங்கள் மாறிப்போயின. விவசாயிகளின் வாழ்வும் வறண்டு கிடக்கின்றது. இந்த நிலைமையில், விடிகாலையின் கதிரொளிபோல வந்த குழந்தைகளுக்கு வைக்கோல் பொம்மைகளைச் செஞ்சு கொடுக் கும் நடிகர்களிடம் ‘அந்த பொம்மை களுக்குக் கண்கள் வைக்க எங்களிடம் தானியங்கள் இல்லையே?... நாங்க யார்ட்ட போயி கேட்போம்...ன்னு கேட்டாங்க... தூர ஊருக்குப் போன எங்க பொம்மைகள் கண்திறக்க தானியங்கள் கொண்டு வருவீங்களா? தானியம் வச்சிருக்கீங்களா...? வதெ நெல் இருந்தா கொடுங்களேன்...’ நடிகர்களுக்கு தானியங்களைப் பரி சாகக் கொடுத்த அந்தக் கிராமத்தின் குழந்தைகள் தானியங்களைத் தேடிய லையும் அவலம் நடிகர்களின் குரல் வழியே நீண்டுகொண்டேயிருக்கிறது. வனப்போடும் செழிப்போடும் இருந்த விவசாயிகளின் வாழ்வியல் உரு மாறிப் போனதையும், நடிகர்களின் கலைவாழ்வும் வறண்டு போனதை யும் நடிகர்களின் அனுபவங்கள் சோகக் கதைகளை நிரப்பி வெளிப் படுத்துகின்றன.

நாடக நிலமெங்கும் ஆன்மாக்களின் அழுகையாலும், தொலைந்துபோன வாழ்வையும் உறவுகளையும் மண் ணையும் விதைகளையும் நினைத்த ஒப்பாரிகளாலும் நிரம்புகின்றது. உயிருடன் உலாவிக் கொண்டிருக்கும் நடிகர்களின் ஆன்மாவும், நொடித்துப் போன விவசாயத்தால் இனி வாழவே முடியாது எனக் கருதித் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் ஆன் மாக்களும் மாறிமாறி உருவெடுத்து விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளின் பின்னணியை விவரிக்கின்றன.

உடலில் கசியும் தீநீரை நிலத்தில் சிந்தியபடியும் உரத்த குரலில் கூவிய படியும் கொல்லப்பட்ட விவசாயி களின் ஆன்மாக்களை உசுப்பி எழுப்பு கிறது நாடகம். நடிகர்களின் குரலும் உடலும் ஒத்திசைந்து நாடக நிலத்தை மயான வெளியாக மாற்றிவிடு கின்றன. வயல்நிலத்தில் விதைகளோடு விதைகளாகப் புதைக்கப்பட்ட விவசாயிகளின் ஆன்மாக்களைத் தேடும் நடிகனின் ஆன்மா ‘எங்க ஊர்ல மரித்த விவசாயிகளெல்லாம் வயல் நிலத்துக்கு அடியிலதான் தூங்கிக்கிட்டு இருக்காங்க... வயல்களின் முளைத்தெழும் எழும்புகளால் இப்பூமியெங்கும் உழுது வருகி றேன்... எங்க ஊரு தானியங்களுக் குள்ள எங்க முன்னோர்களோட மூச்சு இருக்கு...’ எனத் தேடியலைவதைக் காட்சிப்படுத்துகின்றது நாடகம்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயி களின் ஆன்மாக்கள் திரும்பவும் மண்ணைச் சுற்றிச் சுற்றியே அலை கின்றன. அவை, பாரம்பரிய விவசா யம் அழிந்து கொண்டிருப்பதை நினைத்துக் கவலை கொள்கின்றன; தொலைந்துபோன விதைகளைக் கண்டடையத் துடிக்கின்றன. நவீன விவசாயத்தின் பாதிப்புகளைக் கதை கதையாய்ச் சொல்லித் திரிகின்றன. செத்துப்போன விவசாயிகளின் ஆன் மாக்களை மறுஉருவாக்கம் செய் கின்றது நாடகம்.

தெலுங்கானா, மாமில்லா கொண்ட பள்ளி, விதர்பா மட்டுமல்ல; புதுக் காலனியமாக மாற்றப்பட்டிருக்கும் இந்திய ஒன்றிய நிலமெங்கும் உள்ள விவசாயிகள் தற்கொலைக்குத் தூண் டப்பட்டிருக்கிறார்கள் அல்லது முட மாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்திய ஒன்றியத்தில் 1997 முதல் 2007 வரை ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலையில் மட் டுமே செத்துப்போயிருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை நாளுக்குநாள் அதி கரித்துக்கொண்டேதான் இருக்கின் றது. தற்கொலையால் செத்துப்போன விவசாயிகளின் மனைவிமார்கள் வித வைகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அனாதைக ளாக அலைந்து கொண்டிருக் கிறார்கள்.

நிலத்தை நினைத்தும் மனைவி மக்களை நினைத்தும் செத்துப்போன விவசாயிகளின் ஆன்மாக்கள் அழுது புலம்புகின்றன. ‘என் நேசத்தின் துயர வாக்குகளை உன்னிடம் அனுப் புகிறேன். கொண்டு செல்வேன். நில அறைகளுக்குள் அறுவடைக்கான குலவைகளோடு காத்திருப்போரிடம் அது சென்றடையட்டும். எதுவுமே செய்யல. என்ன செய்யுறதுன்னே தெரியல... என் மக்களோட நானும் போயிட்டேன்... பாவம் என் மகனும் மனைவியும் சுடுகாட்டுலேயே அலை யுறாங்க...’ என இன்னொரு ஆன்மா அழுது தீர்க்கிறது. ‘எங்க ஊர்ல ஆயிரக்கணக்கான விவசாய விதவைப் பெண்கள் இருக்காங்க. ஆடுமாடுக வித்த பிறகும் தொழுவத்த சுத்தி கைகோர்த்து அழுவுறாங்க...’ என வும், எங்க உண்ணாவிரதத்தால எங்க ஊரு தானியக் கதிருகளெல்லாம் ரொம்ப வாடிப் போச்சுன்னு அப் பத்தா வந்து சொல்லிட்டுப் போனா... எனவும் அடுத்தடுத்த ஆன்மாக்கள் புலம்பித் தவிக்கின்றன. இதுமட்டு மல்ல, ‘எங்க கோவணத்த உருவிக் கிட்டு டஜன் கணக்குல அடி வெளுத் துட்டான். பத்துநாளா எங்களாள உட்காரவே முடியல. ரொம்ப வலிக் குது’. ‘அடிக்கும்போது ரெண்டு பேரு கைய இறுக்கிப் பிடிச்சிட்டாங்க. ஒருத்தன் சவுக்கால, இன்னொருவன் லத்தியால...’ கடனைத் திருப்பிக் கட்ட முடியாமல் வலுக்கட்டாயமாகச் சிறையில் தள்ளப்பட்ட விவசாயிகள் மீது நிகழ்ந்த வன்முறைகள் ஆன்மாக் களின் குரல்வழி வெளிப்படுகின்றன.

ஒப்பாரிகளைப் பாடிக்கொண்டு நாடக நிலத்தில் உலவித் திரியும் விவசாய ஆன்மாக்கள் ஒவ்வொருவ ரின் கழுத்திலும் நீண்ட மரக்கட்டைகள் கயிற்றில் கட்டப்பட்டு, அதை இழுத்துத் திரிவதைப் போன்ற காட்சி யில், நடிகர்களின் உடல்மொழியும் அழுகையில் தேய்ந்துபோன குரலும் முடமாக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வியலைக் குறியீடாய் வெளிப் படுத்தின. கொத்துக் கொத்தாக விவ சாயிகள் தற்கொலை செய்து கொள் வதற்கும், கிராமங்களை விட்டு விவ சாயத் தொழிலைவிட்டு நகரங்க ளுக்குப் புலம்பெயர்வதற்கும் ஒரு வேளைச் சோற்றுக்குக் கூட வழியில் லாமல் வெறும் உதிரி மனிதர்களாக விவசாயிகள் மாற்றப்படுவதற்கும் என்ன காரணம்?

1960களின் இறுதிவாக்கில் இந்தியா வில் புகுத்தப்பட்ட பசுமைப் புரட்சி என்னும் மோசடித் திட்டமானது, பன்னாட்டு உர நிறுவனங்கள், உழவுந்து நிறுவனங்கள், விதை மற் றும் பூச்சிமருந்து நிறுவனங்களின் வணிகச் சந்தைக்காகவும் இலாப வேட்டைக்காகவும் உலக வங்கியின் உத்திரவுப்படி புகுத்தப்பட்டது. பாரம் பரிய விவசாயம் பின்னுக்குத் தள்ளப் பட்டு நவீன விவசாய முறைகள் புகுத்தப்பட்டது. நீர் ஆதார அமைப்பு களான ஏரிகள், கண்மாய்கள், குளங் கள், ஆறுகள் போன்றவற்றைப் பராம ரிப்பதைக் கைவிட்டுவிட்டு, ஒவ் வொரு விவசாயியும் தனித்தனியாகப் புதிய கிணறுகளை வெட்டிக் கொள் வதற்கும், ஆழ்துளைக் கிணறுகளைப் போடுவதற்கும் ஊக்கமளித்தது அரசு. இதன் விளைவு, நிலத்தடி நீர் வெகு வாக உறிஞ்சப்பட்டது. நீர்மட்டம் குறைந்து கிணறுகள் வறண்டன. நிலத்தடி நீரும் உப்பாகிப் போனது. இது ஒருபுறமிருக்க, பசுமைப் புரட்சி என்னும் நவீன விவசாய முறைகளால் அதிகளவு உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் ஏராளமாக மண்ணில் கொட்டப்பட்டன. வேதிப் பொருட் கள் அதிகளவு மண்ணில் கலந்து தண்ணீர் வளமும் நஞ்சாக்கப்பட்டது; பல்லுயிர் வகைகளும் அழிக்கப் பட்டன; மண் வளமும் கெட்டுப் போனது.

காலங்காலமாக விவசாயத்திற்குப் பயன்பட்டுவந்த பாரம்பரிய விதை களைப் புறக்கணித்து விட்டு, பன் னாட்டு விதை நிறுவனங்களான மாண் சாண்டோ, டெர்மினேட்டர் போன்ற விதைகளைப் பயன்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த விவசாய நிலங் களும் மலட்டுத்தன்மை கொண்டவை யாக மாறிப்போயின. தற்போது மரபணுப் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் பி.ட்டி விதைகளாலும் பாரம்பரிய விவசாய முறைகளும் பாரம்பரிய விதைகளும் நம்மிடமிருந்து அந்நியப் படுத்தப்படுகின்றன. நவீன விவசாய முறைகள் என்னும் மோசடி வலைக் குள் இந்திய ஒன்றிய விவசாயிகள் முடக்கப்பட்டுள்ளனர். இந்த விவசாய முறைகளில் விளைச்சலும் இல்லை; வருமானமும் இல்லை; உணவுக்கான சேமிப்பும் இல்லை; கடன்பட்டாவது விளைச்சலைக் கண்டுவிடத் துடிக்கும் விவசாயிகளுக்கு மேலும் மேலும் கடன் சுமைகளே கூடின. கடன் தொல்லையிலிருந்தும் சுமையிலிருந் தும் மீளமுடியாமல் தவித்த விவசாயி களுக்குத் தெரிந்த ஒரே தீர்வாக தற்கொலையை மட்டுமே தேர்ந் தெடுத்துக் கொள்கிறார்கள்.

1990களில் இருந்து ஏகாதிபத்தியங் களால் புகுத்தப்பட்ட உலகமயம் என்னும் புதுக்காலனியச் சுரண்டல் முறைகளும் அச்சுரண்டலுக்கு வழி வகுத்துக் கொடுக்கும் தரகு முதலாளித் துவ அரசமைப்பும் அதிகாரமும்தான் இந்த மண்ணின் சுயத்தையும் விவசா யிகளின் வாழ்வையும் அழித்துக் கொண்டிருக்கின்றன. இன்னும் உயிரு டன் இருந்துகொண்டிருக்கும் விவசா யிகளின் விளைநிலங்கள் நகர விரி வாக்கத்திற்காகவும், சிறப்புப் பொரு ளாதாரத் திட்டங்களுக்காகவும், தரகு முதலாளிகளின் சுரண்டல் தொழிற் சாலைகளுக்காகவும், உடைமை வர்க் கத்தினரின் உல்லாச ஆடம்பர மாளி கைகளுக்காகவும் பறிக்கப்படு கின்றன.

இந்நாட்டு விவசாயத் துறையிலிருந்து இந்நாட்டு விவசாயிகளைப் படிப்படி யாக அந்நியப்படுத்தி, இந்நாட்டு உணவு உற்பத்தி நடவடிக்கையை முற்றாக நிறுத்திவிடுவதன் மூலம், இந்நாட்டு மக்கள் தங்கள் உணவுத் தேவைக்கு ஏகாதிபத்தியங்களிடம் கையேந்தி நிற்கவேண்டிய நிலைக்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன புதுக் காலனிய நடைமுறைகள். வேறுவகை யில் சொல்வதானால், புதிய வகைப் பட்ட அடிமைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது புதுக்காலனியம்.

புதுக்காலனியத்தால் அழிக்கப்படும் விவசாயத்தையும், விவசாயிகளையும் நஞ்சாக்கப்படும் நிலத்தையும் தொலைக்கப்படும் விதைகளையும் பாரம்பரியத்தையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற குரல் நாடக நில மெங்கும் ஒலிக்கின்றது. இந்நாடகத் தில் பங்குபெறும் நடிகர்கள் வெளிப் படுத்தும் முரண்நிலை உடல்மொழி குறிப்பிடத்தக்கது. நாடகத்தில் வரும் ஊனமில்லாத நடிகர்கள் முடமாக்கப் பட்டவர்களைப் போல உடலால் பேசுவதும்; உடலால் ஊனப்பட்ட நடிகரும், பார்வை இழந்த நடிகரும் முடமாக்கப்பட்ட விவசாயிகளை உயிர்த்தெழச் செய்கின்றன. அவர்க ளின் உடல்மொழியும் குரல்மொழி யும் நாடக நிலத்திற்கு ஆற்றலைப் பாய்ச்சிக்கொண்டே இருந்தன.

உடம்புக்குள்ள விதையிருக்கு... கண்ணுக்குள்ள விதையிருக்கு...

உதிரமெல்லாம் தவசமாம்... எங்க பொண்ணு

கூந்தலெல்லாம் தானியமாம்...

தொழஞ்ச விதெ... திருடுபோன விதெ...

எங்க ஞாபக நிலத்தில் திரும்ப முளைக்குதம்மா...

என்ற பாடலைப் பாடிக்கொண்டே நாடக நிலத்தில் நுழையும் உடல் ஊனப்பட்ட நடிகன் உடலெங்கும் சலங்கை கட்டி ஊர்ந்து ஊர்ந்து வந்து சாமியாடியைப்போல உடல் தூக்கிப் பாடும் காட்சியில் உயிர் நிரம்பி வழிந்தது.

ஊசிபோல வாக்கெடுத்து ஊரெல் லாம் சுத்திவந்தேன்

கத்திபோல வாக்கெடுத்து காடெல் லாம் சுத்திவாரேன்

எஞ்சொல்லுக்கு நிழலுண்டு... எஞ்சொல்லெடுத்துப் போகவாங்க

என அழைக்கும்போதும்,

குதிரைவாலி, கேப்பைத் திணை, தோரை தோப்பு, வரகு, பனிவரகு, குள்ளக்கார், பொழிகருப்பு, தூய மல்லி, இறையான், குறுவை, கப்பக் கார், ஐவனம், சாலி, செந்நெல்லு, வெந்நெல்லு, முடந்தை, சீரகச் சம்பா, தங்கச் சம்பா, பொன்னிவாரா, கம்பு, சோளம்... போன்ற இந்த மண்ணில் புதையுண்டு போன விதைகளை மீட் டெடுத்துப் பாடும்போதும் புதை யுண்டு போன விவசாயிகளின் ஆன் மாக்கள் மறுஉயிர்ப்பு கொள்கின்றன.

உடலில் மட்டுமே ஊனப்பட்ட விவசாயி, மனதால் ஊனப்படுத்தப் பட்ட நொடித்துப் போன விவசாயி களை உசுப்பேற்று விடுகிறார். அவர்களை நிலமெங்கும் உழுதுவரச் சொல்லி, உழுத நிலத்தில் விதை களைத் தூவ விதைப் பைகளைத் தரு கிறார். விவசாயிகள் தங்கள் நிலமெங் கும் மீண்டும் உழுகிறார்கள். முடங்கிக் கிடந்த விவசாயிகளின் மனங்கள் சிறகுவிரித்துப் பறக்க அவர் களின் கைகளில் சொளகு இறக்கை கள் மாட்டி விடுகிறார் உடல் ஊன முற்ற விவசாயி. செத்துப்போன விவ சாயிகளின் ஆன்மாக்கள் பறவை களைப் போல நிலமெங்கும் சுற்றித் திரிவதைக் குறியீடாய் உணர்த்தி நின்றது நாடகம். இந்தக் காட்சியில் நாடக நிலமெங்கும் தங்கள் உடல் களால் உழுவதைப் போல உடல் மொழி நாடக நிலத்தை விவசாய நிலமாக மாற்றிப்போட்டது. உழுது விட்ட நடிகர்களின் உடம்பிலிருந்து கசிந்த வியர்வையும் வாசமும் நாடக நிலத்தைச் சூடேற்றிப் போட்டன.

இந்நாடகப் போக்கின் ஓரிடத்தில், பெண்ணுக்கும் நிலத்துக்குமான உறவு குறித்த காட்சி முக்கியமானது. நிலத் திற்கும் பெண்ணிற்கும் இயற்கை சார்ந்த பிணைப்பு உண்டு. உயிர்களை மறுஉற்பத்தி செய்யும் ஆற்றல் நிலத் திற்கும் பெண்ணிற்கும் இருப்பத னால், பெண்ணையும் நிலத்தையும் இணைத்தே பார்க்கும் மரபு தொழில் பழங்குடிச் சமூக அமைப்பில் காணப் பட்டதுண்டு. அம்மரபை மீட்டுரு வாக்கம் செய்திருக்கிறது இந்நாடகம். நாடக நிலத்தில் ஒரு பெண் கால்களை அகல விரித்தபடி படுத்திருக்க, கையில் மணியுடன் தானிய வகை களைப் பாடலாகப் பாடிப் நுழையும் நாளிமணிக்காரன் இடுப்பில் எழும்பு வாத்தியமும் தானியப் பைகளும் கட்டியுள்ளார். தன் இடுப்பில் உள்ள எழும்பு வாத்தியம் கருவி, படுத் திருக்கும் பெண்ணின் உடலைச் சுற்றி உழுவதைப் போன்ற கோடுகள் கிழித்து வந்து, அப்பெண்ணின் பிறப் புறுப்பு வாசலில் தவசங்களிட்டு தானியங்களைக் குவித்துச் செல் கிறார். பெண்ணின் உடலிலிருந்து தானியங்கள் முளைக்கின்றன. நாடக நிலம் பெண்ணாகவும், நடிகர்கள் அந் நிலத்தில் முளைத்த தாவரங்களாகவும் வெளிப்பட்ட குறியீடுகள், தாய்வழிச் சமூக அமைப்பை அடையாளப்படுத் துவதாக அமைந்திருக்கின்றன. சிந்து வெளியில் கண்டெடுக்கப்பட்ட சுடு மணல் சிற்பங்கள் சில, பெண்ணின் வயிற்றிலிருந்து செடிகொடிகள் முளைப்பதைப் போன்ற உருவத் துடன் காணப்படுகின்றன. நிலத்திற் கும் பெண்ணிற்குமான உறவு பண் பாட்டு எச்சங்களாக வெளிப்பட்டிருக் கின்றன. அந்தப் பண்பாட்டு எச்சத்தையே நாடகம் மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது.

மண்ணுக்குள் புதைக்கப்பட்ட விவ சாயிகளின் எழும்புக் கூடுகளையும், புதைந்துபோன விதைகளையும் தோண்டியெடுக்கும்போது "புத்தர்' உருவச் சிலையொன்றை நடிகர்கள் கண்டடைகிறார்கள். நாடகத்தில் வெளிப்படும் "பவுத்த அடையாளம்' என்பதும் மிக முக்கியமானது. விவ சாயத்தை இழிதொழிலாகவும் விவ சாயிகளை இழிபிறவினர்களாகவும், பார்ப்பனியம் பார்த்து வந்த சூழலில், விவசாயத்தை மேலான தொழிலாக வும், விவசாயிகளை மனிதர்களாக வும் பார்த்தது பவுத்தம். அதனா லேயே பெரும்பாலான விவசாயிகள் பவுத்த மார்க்கத்தைத் தழுவினார்கள். தற்கொலையில் மடிந்துபோன விவ சாயிகள் பெரும்பாலும் பவுத்தம் சார்ந்தவர்கள். புதையுண்டுபோன பவுத்தர்களையும் பவுத்த அடை யாளத்தையும் மீட்டுருவாக்கம் செய் யும் வகையில்தான் "புத்தர் சிலை' விதையாகக் கண்டறியப்படுகிறது. இதை ஒரு குறியீட்டு வடிவில் வெளிப்படுத்தியிருக்கிறது நாடகம்.

இந்நாடகத்தில் வெளிப்பட்ட நடி கர்களின் உடல், குரல் மொழிகள் துடிப்பான ஆற்றலை வெளிப்படுத்தி யிருக்கிறது. நடிகர்கள் மட்டுமல்ல, நாடக நிலத்தையே உயிர்கொள்ளச் செய்யும் வகையில் நாடக ஒளியமைப் பும் இசையும் நாடகத்தோடு ஒத் திசைந்து வெளிப்பட்டன. மஞ்சள் ஒளி விதைகளையும், சாம்பல் ஒளி சுடுகாட்டையும், பச்சைஒளி விளை நிலத்தையும், சிவப்பு ஒளி மரண ஓலங்களையும் வெளிப்படுத்துவதற்கு உகந்த வகையில் பயன்படுத்தப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. நாட கத்தின் ஊடே ஒப்பாரியுடன் பயணிக் கும் டிஜிருடு இசை நாடக ஓட்டத்தின் உணர்வோடு ஒன்றச் செய்யும் வகை யில் உடன் வந்ததும் குறிப்பிடத்தக்க தாகும். நாடகத்தில் பங்கேற்ற கலை ஞர்கள் யாவரும் விவசாயிகளின் ஆன்மாக்களாகவே மாறிப் போனார் கள். தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் மறுஉயிர் கொண்டு வந்ததைப் போன்ற உணர்வோட் டத்தைப் பார்வையாளர்களிடம் ஏற் படுத்திவிட்டது இந்நாடகம். நடிகன் + நாடகம் + நிகழ்விடம் இம்மூன்றுக்கு மான உறவில் உயிர்த்தெழும் ஆற் றலைப் பார்வையாளருக்குள்ளும் உட்செலுத்தும் முருகபூபதியின் நாடகங்களும் "குற்றம் பற்றிய உடல்' எனும் இந்நாடகமும் சிறப்பான பங்களிப்பைச் செய்திருக்கிறது. கிராமங்கள் தோறும் இந்நாடகம் நிகழ்த்தப்பட வேண்டும். அதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும். அது நமது கடமையும் கூட.

- மகாராசன்

Pin It