இந்தியாவிலும் உலகிலும் கடவுள்-மத நம்பிக்கை குறைந்து வருவதாக, அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது. உலகில் 5 கண்டங்களி லுள்ள 57 நாடுகளில் 51,927 பேரிடம் இது பற்றிய கருத்துகள் கேட்கப்பட்டன. அதன் படி, இந்தியாவில் மத நம்பிக்கையுள்ளோர் எண்ணிக்கை 7 ஆண்டுகளில் 6 சதவீதம் குறைந்துள்ளது. 2005இல் 87 சதவீதம் பேர் தங்களுக்கு கடவுள் மத நம்பிக்கை இருப்பதாக கூறியிருந்தனர். 2013இல் 81 சதவீதம் பேர் மட்டுமே இவ்வாறு கூறி யுள்ளனர். அதே நேரத்தில் நாத்திகர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்ட வர்களின் எண்ணிக்கை ஒரு சதவீதம் குறைந்துள்ளது. 2012 இல் 4 சதவீதம் பேர் தங்களை நாத்திகர்கள் என்று பதிவு செய்தார்கள். 2013 இல் இது 3 சதவீத மாகியுள்ளது என்று ஆய்வு கூறுகிறது. இது இந்தியாவில்!
உலகம் முழுதும் மதத்தை நம்புவோர் எண்ணிக்கை 9 சதவீதம் குறைந்துள்ளது. நாத்திகர்கள் எண்ணிக்கை 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
சில நாடுகளில் மட்டுமே மத நம்பிக்கையாளர்கள் அதிகரித்துள்ளனர். அதில் பாகிஸ்தானும் ஒன்று. அந்த நாட்டில் மத நம்பிக்கையாளர்கள் 6 சதவீதம் அதிகரித்துள்ளனர். தற்போது உலக கத்தோலிக்கர்களின் தலைவராக உள்ள போப் சொந்த நாடான அர்ஜென்டினாவிலேயே மதத்தை நம்புவோர் 8 சதவீதம் குறைந்துவிட்டனர்.
தென்னாப்பிரிக்காவில் 19 சதவீதமும், அமெரிக்காவில் 13 சதவீதமும், சுவிட்சர் லாந்து மற்றும் பிரான்சு நாடுகளில் 23 சதவீதமும் - மத நம்பிக்கையாளர்கள் குறைந்துள்ளனர்.
உலகில் பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்காவுக்கே சவால் விட்டு வளர்ந்து கொண்டிருக்கும் சீனா, நாத்திகர்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடாக உள்ளது. மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் தங்களுக்கு கடவுள் மத நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளனர். கடவுள் நம்பிக்கையற்றவர்களின் உலக சராசரி 13 சதவீதம்; சீனாவில் மட்டும் இது 50 சதவீதமாக உள்ளது.
கடவுளை மறுத்த டார்வின் பெருந்தன்மை
கடவுள் ஒவ்வோர் உயிரினத்தையும் தனித்தனியாக உருவாக்கியதாகத் தான் உலகின் எல்லா விஞ்ஞானிகளும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை தவறானது என்று முதலில் சொன்னவர் டார்வின்தான். அவரது 20 வருட ஆராய்ச்சி மூலம் இதைக் கண்டறிந்தார்.
ஓர் இனத்தை சேர்ந்த உயிரினம் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது அது அந்த புதிய சூழ்நிலையில் நன்கு வாழ்ந்து வருவதற்கு தேவையான புதிய உடல் மாற்றங்களை படிப்படியாக உருவாக்கிக் கொண்டுவிடும் என்பதை இவர் ஆதாரங்களுடன் எடுத்துச் சொல்லி வந்தார். வாழ்க்கை என்பது ஒரு தீவிரமான போராட்டம்தான். அதில் திறமையும், சக்தியும் மிகுந்த உயிரினங்கள் தான் தங்களுடைய இனப்பெருக்கத்தைச் செய்து கொண்டு இந்த உலகில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன என்று கூறினார்.
காடுகளிலும் மலைகளிலும் சமவெளிகளிலும் கடற்கரை பிரதேசங்களிலும் பல ஆண்டு பயணம் செய்து உலகில் வாழ்ந்து வரும் உயிரினங்களைப் பற்றி, தான் சேகரித்த விவரங்களைக் கொண்டு உயிரினங்களின் ஆரம்ப நிலை என்ற நூலை எழுதினார். 20 வருட உழைப்பு அது. அப்போது அவருக்கு பெரிய சங்கடம் ஏற்பட்டது. ஆல்பிரட் ரஸ்ஸெல் வாலஸ் என்ற இளம் விஞ்ஞானி உயிரினங்களுக்கிடையே ஏற்படும் மாறுதல்களை விவரித்து ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை எழுதி டார்வினுக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர், தான் கட்டுரையை விஞ்ஞான கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கிக் கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார்.
அதுநாள் வரையில் தான் செய்து வந்த ஆராய்ச்சியை வேறு யாரும் செய்து வரவில்லை என்று டார்வின் நம்பி இருந்தார். இப்போது ஓர் இளம் விஞ்ஞானி தனக்கு போட்டியாக வந்து விட்டிருக்கிறார். அந்த கண்டுபிடிப்பை உலகிற்கு தெரிவிக்க தன்னுடைய உதவியை நாடி இருக்கிறார். மேற்கொண்டு என்ன செய்வதென்று தடுமாறினார். அவரது நண்பர்களோ நீங்கள் 20 வருடமாக உலகம் முழுவதும் சுற்றி கடினமான ஆராய்ச்சி மூலம் திரட்டிய புதிய கண்டுபிடிப்பை கண்டிருக்கிறீர்கள். இதைப் பற்றி ஒரு பெரிய நூலையே எழுதியுள்ளீர்கள். உங்கள் ஒருவருக்குத் தான் புகழ், பெருமை அனைத்தும் கிடைக்க வேண்டும். உடனே உங்கள் கண்டுபிடிப்பை விஞ்ஞான கழகத்தில் அறிவிக்க ஏற்பாடு செய்யுங்கள் என்றனர்.
டார்வின் இதை மறுத்தார். நான் கண்டுபிடித்ததையே இளம் விஞ்ஞானியும் கண்டுபிடித்துள்ளார். அவரது கட்டுரையையும் தனக்கு அனுப்பி உதவும்படி கேட்டுக் கொண்டார். இளம் விஞ்ஞானியை ஏமாற்றி விட்டதாக ஒரு அவப்பெயர் எனக்கு ஏற்பட்டுவிடக்கூடாது. அப்படி யாரும் பேசாமல் இருக்க நான் என் புத்தகத்தை எரித்துவிடவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
இதைக் கேள்விப்பட்ட இளம் விஞ்ஞானியோ இந்த கண்டுபிடிப்புக்கான பெருமை முழுவதும் டார்வினுக்கு தான் போய்ச் சேர வேண்டும். நான் அவருடைய ஒரு சீடன் தான் என்று அறிவித்தார். டார்வின் இதை ஏற்க மறுத்துவிட்டார். 1859 இல் விஞ்ஞானக் கழகத்தில் இருவரும் தங்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை படித்தனர். உலகமே டார்வினுடைய பெருந்தன்மையைப் பாராட்டியது.
5 ரூபாய் நாணயத்தில் ‘மகாவிஷ்ணு தேவி’
இந்திய அரசு 5 ரூபாய் நாணயம் ஒன்றை ‘மகாவிஷ்ணு தேவி’ படத்துடன் 2012இல் வெளியிட்டுள்ளது.
மதச்சார்பற்ற நாட்டில் இப்படி ஒரு நாணயத்தை ‘நாணயமின்றி’ வெளியிட் டிருக்கிறார்கள். இனி ராமன், கிருஷ்ணன் படங்களையெல்லாம்கூட நாணயத்தில் வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை. காங்கிரஸ் ஆட்சி, பா.ஜ.க. ஆட்சிக்கு மாற்று என்று அவ்வப் போது கூறி வரு கிறது. இதுதான் ‘மாற்று’ என்பதற் கான அடையாளமோ?
இன்று விடுதலை தளத்தில் வந்த ஒரு பதிவும், உண்மையை ஆராயாமல் அதனை அப்படியே பிரதியெடுத்து போட்ட தமிழ் ஓவியா தளத்தின் பதிவும் அதிர்ச்சியளித்த ன.
விடுதலை தளம் சொல்ல வருவது இதுதான். பிரபல ஆய்வு நிறுவனமான கல்லுப், ஆத்திகம் நாத்திகம் குறித்த கருத்துக்கணிப்ப ை பல்வேறு நாடுகளில் சென்ற ஆண்டு நடத்தியது. அதன் முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது . இந்தியாவில், கடவுள் நம்பிக்கையற்றவர ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா க அந்த ஆய்வு கூறுகின்றதாம். இதன் அடிப்படையில் பின்வருமாறு தலையங்கம் வெளியிடுகின்றது விடுதலை தளம்..
"இந்தியர்களிடம் கடவுள், மத நம்பிக்கை குறைந்தது"
இது உண்மையா என்பதை அறிய கல்லுப் ஆய்வின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை முதலில் பார்த்து விடுங்கள். இங்கே உண்மை என்னவென்றால் இந்தியாவில் இறைநம்பிக்கையாள ர்களின் எண்ணிக்கையெல்லா ம் குறையவில்லை, மாறாக நாத்திகர்களின் எண்ணிக்கை தான் குறைந்துள்ளது. மேற்சொன்ன ஆவணத்தின் 12-ஆம் பக்கம் இந்த உண்மையை உரக்க சொல்கின்றது.
மிகத் தெளிவாக, இந்த ஆவணம், 2005-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாத்திகர்களின் தற்போதைய இந்திய எண்ணிக்கை 1% குறைந்துள்ளதாக பறைசாற்றுகின்றத ு.
பின்னர் எப்படி விடுதலை தளம் துணிந்து இந்த பொய்யை/புரட்டை கட்டுரையாக வெளியிட்டது? ஆங்கிலத்தை தவறாக புரிந்துக்கொண்ட து காரணமாக இருக்கலாம். எப்படி என்பதை பின்வருமாறு விளக்கலாம்.
நம் ஊரிலேயே மூன்று வகையான மனிதர்களை பார்த்திருப்போம ்.
•மத நம்பிக்கைகள் மீது பற்றுக்கொண்டு அதன்படி நடக்க விரும்புபவர்கள் (ஆங்கிலத்தில் இவர்களை றெலிகிஒஉச் பெஒப்லெ என்பார்கள்).
•ஒரு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அந்த மத கோட்பாடுகளை பின்பற்றாமல் அசட்டையாக இருப்பவர்கள். இவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், தாங்கள் சார்ந்த மத கோட்பாடுகளை பின்பற்றுவதில் அலட்சியமாக இருப்பவர்கள் (இவர்களை ஆங்கிலத்தில் ணொட் றெலிகிஒஉச் பெஒப்லெ என்பார்கள்).
•நாத்திகர்கள், அதாவது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் (இவர்களை ஆதெஇச்ட் என்பார்கள்).
மேலே சொன்ன மூன்றின் அடிப்படையில் தான் கேள்விகள் கேட்கப்பட்டுள்ள ன. மக்களிடம் ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகள் இவை தான்.
1) ஆரெ யொஉ ரெலிகிஒஉச்?
2) ஆரெ யொஉ நொட் ரெலிகிஒஉச்?
3) ஆரெ யொஉ அ சொன்வின்செட் ஆதெஇச்ட்?
இதன் அடிப்படையில் 81% இந்திய மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதாகவு ம், 13% மக்கள் மத கோட்பாடுகளை பின்பற்றுவதில்ல ை எனவும் (கவனிக்கவும், இவர்கள் தங்கள் மதத்தை துறந்தவர்களோ அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களோ இல்லை). 3% மக்கள் தங்களை நாத்திகர்கள் எனவும் கூறியுள்ளனர். ணொட் ரெலிகிஒஉச் என்பதை தான் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தவறாக புரிந்துக்கொண்ட ுவிட்டது விடுதலை பத்திரிக்கை/தளம ்.
இறைநம்பிக்கையாள ர்கள் 6% குறைந்துவிட்டதா க குறிப்பிடும் 'விடுதலை', யோசிக்க வேண்டாமா, இறைநம்பிக்கையாள ர்கள் குறைந்துவிட்டனர ் என்றால் நாத்திகர்களின் எண்ணிக்கையில் இந்த 6% அதிகரித்திருக்க வேண்டாமா? ஆனால் 3% தானே நாத்திகர்கள்? மிக எளிமையாக புரியும் இந்த லாஜிக்கை எப்படி கோட்டைவிட்டது விடுதலை தளம்?
விடுதலை தளத்திலும், தமிழ் ஓவியா தளத்திலும் அவர்கள் செய்த தவறை சுட்டி காட்டி நான் இட்ட கருத்தை பின்வருமாறு முடித்திருந்தேன்.
//உங்களின் இந்த பதிவு தலைப்பும், இந்தியா பற்றிய ஆய்வு தகவல்களும் தவறான வழிகாட்டுதலாகும ். இதே கட்டுரை விடுதலை பத்திரிக்கையில் வந்திருந்தால், ஆய்வு நடத்தியவர்களின் கருத்தை தவறாக சித்தரித்து அவர்களை கேலிக்குள்ளாக்க ும் அணுகுமுறையாகும் . நானும் என்னை போன்ற பலரும் பெரிதும் மதிக்கும் தந்தை பெரியார் அவர்கள் சார்ந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் இப்படியாக செயல்படுவது வருத்தத்தை தருகின்றது. ஆகையால் தாங்கள் இந்த பதிவை திருத்தி, உண்மைக்கு ஏற்றமாறு அமைக்கும் படி கேட்டுக்கொள்கின ்றேன்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ //
திருத்தங்களை மேற்கொண்டு வருத்தம் வெளியிடுமா விடுதலை தளம்? பகுத்தறிவு என்பது நாத்திகம் மட்டுமே சம்பந்தப்பட்ட சொல்லாக இருந்தால் இந்திய பகுத்தறிவாளர்கள ் போக வேண்டிய தூரம் அதிகரித்திருக்க ின்றது என்பதையே இந்த ஆய்வு காட்டுகின்றது..
நன்றி..
manithaabimaani.blogspot.com/. ../...
RSS feed for comments to this post