மில்லியன் கணக்கில் மனிதர்கள் வாழும் நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சுழல் சீர்கேட்டின் அளவை சொல்லி முடியாது. எத்தனை கார்கள், எவ்வளவு மின்சாரம், எத்தனை கழிவுகள்...?
எல்லாருடைய வீட்டின் கூரைகளையும் பசுமையாக்கினால் ஆண்டுக்கு 55000 டன் கரியமில புகையை காற்றிலிருந்து பிடித்து நீக்கலாம் என்று மிச்சிகன் ஸ்டேட் பல்கலை ஆசிரியர் தெரிவிக்கிறார்.
வீட்டுக் கூரையில் புல்தரை விரிப்பது, செடிகளை வளர்த்தால் அது அழகுக்கு அழகையும், பில்டிங்கை குளிர்ச்சியாகவும் வைக்கும். இதனால் குளிர்சாதனங்களின் மின்சாரம் சேமிப்பாகும். மழை நீர் வீணாகமல் பயன் அடையும். காய்கறிகளை வளர்த்தால் பணம் மிச்சமாகும். மருந்தடிக்காத காய்கறியும் கிடைக்கும். ஒரு வேளை மழை அதிகம் கிடைத்தாலும் கிடைக்கும். செய்தால் என்ன?
- முனைவர் க.மணி