விகிதாச்சார வகுப்புவாரி இடப்பங்கீடு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மற்றும் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதில், 17-2-15 முதல் 28-2-15 முடிய வே. ஆனைமுத்து புதுதில்லியில் தங்கிப் பணியாற்றினார். புதுதில்லித் தோழர்கள் ப. இராமமூர்த்தி, புதேரி தானப்பன், இரா. முகுந்தன், ஜெ.பி. ரவி, சி. முத்துகிருஷ்ணன், ஆனந்த செல்வம், எடிசன், எம். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒத்துழைப்பு நல்கினர்.

சண்டிகாரில் இந்தியக் கூட்டாட்சி பற்றிய பணி :

“உண்மையான இந்தியக் கூட்டாட்சி அமைப்புக் கான குழு”வின் தலைவர் உயர்நீதிபதி அஜித் சிங் பெயின்° அவர்களுடன் கலந்துரையாட வேண்டி, வே. ஆனைமுத்து 1-3-15 பிற்பகல் 1 மணிக்கு சண்டிகார் சென்றடைந்தார்.

1-3-15, 2-3-15 இருநாள்களும் கூட்டாட்சி பற்றி இருவரும் கலந்து பேசினர்.

3-3-15 பிற்பகல் 1 மணிக்கு, நீதிபதியின் வீட்டில் செய்தியாளர்கள் கூட்டத்தில், அஜித் சிங் பெயின்°, வே. ஆனைமுத்து இருவரும் கூட்டாட்சி பற்றிப் பேசி செய்திக்குறிப்பை அளித்தனர்.

4-3-15 : “இந்தியாவை ஓர் உண்மையான கூட் டாட்சியாக ஏன் அமைக்க வேண்டும்” என்பதை விளக்கி, இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடிக்கு விடுத்திட ஏற்ற கோரிக்கை விண்ணப்பத்தை (Memorandum) உருவாக்கி, 4-3-2015 அன்று, பிரதமருக் குப் பதிவு அஞ்சலில் விடுத்து வைத்தனர்.

ஏற்கெனவே, 2013 ஏப்பிரல் 16ஆம் நாள் இப்படிப் பட்ட விண்ணப்பத்தை, அப்போதைய பிரதமர் மன் மோகன் சிங் அவர்களுக்கு அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தில் பரப்புரை :

அனைத்திந்தியப் பேரவையின் துணைத் தலை வர் டாக்டர் தாவுஜி குப்தா, மறைந்த பெரியவர் சிவ் தயாள் சிங், சௌராசியாவின் தங்கையின் பெயரன் நாராயண் °வரூப், சௌராசியா ஆகியோரின் அழைப் புக்கு இணங்க, 11-3-2015 இரவு 10 மணிக்கு வே. ஆனைமுத்து இலக்னோ சென்றடைந்தார். மேலே கண்ட தோழர்கள் இலக்னோ தொடர்வண்டி நிலை யத்தில் வரவேற்றனர்; இலக்னோ டாலிபாக் பகுதியி லுள்ள சிறப்பு விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர்.

12-3-15 இரவு 7 மணிமுதல் 8.30 மணிவரை, உத்தரப்பிரதேச அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் அம்பிகா சவுத்ரி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து, வே. ஆனைமுத்து, டாக்டர் தாவூஜி குப்தா, நாராயண் °வரூப் சவுத்ரி மூவரும் உத்தரப் பிரதேச அரசின் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் நலத்திட்டங்களைக் குறித்து விரிவாக விவாதித்தனர்.

தமிழ்நாட்டு அரசினர் 2014-15ஆம் ஆண்டுக்கு பிற்படுத்தப்பட்டோர் துறை வழியாகவும், ஆதித்திரா விடர் நலத்துறை வழியாகவும் செய்திட்ட திட்டங்கள் பற்றிய அச்சிட்ட அரசு அறிக்கைகளை அமைச்சரிடம் அளித்து, மேலும் மேலும் உ.பி. ஒடுக்கப்பட்ட வகுப்பி னருக்கு நலத்திட்டங்களை வகுத்திட ஆவன செய்யும் படிக் கோரினர்.

அமைச்சருடைய இல்லத்திலிருந்து, தோழர்கள் மூவரும் நேரே இலக்னோ காந்தி பவனில் நடை பெற்ற ஹோலி பண்டிகை - அறுவடைத் திருவிழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வே. ஆனைமுத்து அவ்விழாவில் சிறப்பு விருந்தி னராகச் சிறப்புச் செய்யப்பட்டார். பலரும் மாலைகள், ஆடைகள் அணிவித்தனர். அவ்விழாவில் உரையாற் றிய விழாக்குழுவினர் நினைவுப் பரிசு வழங்கினர். விழாவிலிருந்து இரவு 11.30-க்கு விடைபெற்றனர்.

13-3-2015 : சிவ் தயாள் சிங் சௌராசியா 113ஆம் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பு :

தந்தை பெரியார் அவர்களை உ.பி. மாநிலத்துக்கு அழைத்து, 1944 திசம்பர் 29, 30,31ஆம் நாள்களில் கான்பூரில் “அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்ட இந்துக்கள் லீக் மாநாட்டை” நடத்தியவர் இலக்னோவைச் சார்ந்த சிவ் தயாள் சிங் சௌராசியா. அவர் வெற்றிலை பயிரி டும் வேளாண் குடியைச் சார்ந்தவர். அம்மாநாட்டில், அனைத்திந்தியப் பிற்படுத்தப்பட்டோர் லீக் தலைவ ராகப் பெரியார் ஈ.வெ.ரா.வையும், பொதுச் செயலாள ராக சௌராசியாவையும் தேர்ந்தெடுத்தனர்.

அதே சிவ் தயாள் சிங் சௌராசியா 1953இல் காகா கலேல்கர் தலைமையில் அமர்த்தப்பட்ட முதலா வது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் உறுப்பினராக அமர்த்தப்பட்டு செயல்பட்டார். 1955-இல், கலேல்கர், பிரதமர் நேருவிடம் பரிந்துரை அறிக்கையை அளித்த போது, இவரும் உடன் சென்றார்.

வடஇந்தியாவில், உ.பி.-முசாபர் நகரில், 7-5-1978 அன்று நடைபெற்ற “உத்தரப்பிரதேசப் பிற்படுத் தப்பட்டோர் மாநாட்டில்”, சௌராசியா தலைமையில் தான், முதலாவதாக, வே. ஆனைமுத்து, இடஒதுக்கீடு பற்றித் தொடக்கவுரை ஆற்றினர். இராம் அவதேஷ் சிங், எம்.பி., சீர்காழி மா. முத்துச்சாமி, வே.ஆனைமுத்து மூவரும் வடநாட்டில் பங்கேற்ற முதலாவது பொது நிகழ்ச்சி அதுதான் என்பது நினைவு கொள்ளத்தக்கது. சிவ் தயாள் சிங் சௌராசியா 1903 மார்ச்சு 13இல் பிறந்தவர். அன்னாரின் 113வது பிறந்த நாளை ஒட்டி, 13-3-2015 மாலை 7 மணிக்கு, இலக்னோவில், அம் பேத்கர் பவனில் நடைபெற்ற எளிய விழாவில், வே. ஆனைமுத்து, தாவூஜி குப்தா, காவல் துறை ஓய்வு பெற்ற அதிகாரி தாராபுரி மற்றும் பலர் சிறப்புரை ஆற்றினர்.

14-3-15 அன்று எந்த நிகழ்ச்சியும் இல்லை.

15-3-2015 : பஸ்தியில் பெருந்திரளான கூட்டத்தில் வே. ஆனைமுத்து, தாவுஜி குப்தா பங்கேற்பு :

உ.பி.யில் இலக்னோவிலிருந்து வடகிழக்கில் 203 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது பஸ்தி என்னும் பஸ்தி மாவட்டத் தலைநகரம்.

ஹோலி பண்டிகையை (அறுவடைத் திருவிழாவை) முன்னிட்டு, வடநாடு முழுவதிலும் 6-3-2015 முதல் 15-3-2015 வரை, எல்லா ஊர்களிலும் பெருந்திரளாக மக்கள் கூடி, ஆடிப்பாடி மகிழ்ந்து நிறைவு விழாவைக் கொண்டாடினர்.

பஸ்தி, ஒரு மாவட்டத் தலைநகரம். அங்கு நடை பெற்ற நிறைவு விழாவில் 2000 பேர் இரவு 10 மணி வரை இருந்து விழாவை நடத்தினர்.

அவ்விழாவில் சிறப்பு விருந்தினராக அத்தொகுதி யின் மக்களவை உறுப்பினர் ஹரிஷ் துவி வேதி பங்கேற்றார்.

டாக்டர் தாவுஜி குப்தா உரைக்குப் பின்னர், வே. ஆனைமுத்து நிறைவுரை ஆற்றினார். பஸ்தியிலிருந்து இரவு 11.15 மணிக்குத் தொடர் வண்டியில் புறப்பட்டு, 16-3-2015 பகல் 1.00 மணிக்குப் புதுதில்லியை அடைந் தார்.

ஒடுக்கப்பட்டோர் பேரவையின் பொதுச் செயலாளர் கலச. இராமலிங்கம் 16-3-2015 இரவு வே.ஆனை முத்துவுடன் இணைந்து கொண்டார்.

Pin It