காதல் சபிக்கப்பட்ட
ஒரு பேனா முள்ளில்
பெண்மை உமிழும் அகராதி
காதலி!
இக்கவிதை...
நமக்கானதாய் புனரமைக்கப்பட்ட பூமி!
வெண்ணிற நிலவும்
செந்நிற ஆப்பிள்களும்
தடை செய்யப்பட்ட
இந்நட்சத்திர தோட்டத்தில்
நீயென நான்
நானென நீ
கவிதையென எழுதி முடிக்க
காதலென கொஞ்ச வார்த்தைகள்!
தூறல் விழும்
சிறு மழை காட்டில்
ஊடல் அவ்வப்பொழுது நனைந்துவிட்டுப்போகும்!
பெண்மை பேசும்
புது வெட்கம் போல
சலனம் எப்போதாவாது பொய் பேசிப்போகும்!
அவள் அன்றி அவளாடை
தீண்டி விடும்
காற்றோ, புல்லோ , பூக்களோ
எந்நேரமும் ரீங்காரமிடும் காதலிசையென!
பகலுக்கு இரவின் மீதிருக்கும்
தீராத ஆசையையும்
இரவுக்கு பகலின் மீதிருக்கும்
தீராத பகையையும்
எழுதி முடிக்க வார்த்தைகளற்று
களைப்புற்று இளைப்பாற
கண் விழித்து பார்க்கையில்
காதலி மடியில் துயில் கொண்டது
எத்தனை பேருக்கு வாய்த்திருக்கும்?
- ரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- இதற்குப் பெயர்தான் சமூக நீதியா?
- குடிஅரசு 100
- பூமியில் வந்து விழும் உயர் ஆற்றல் துகள்கள்
- ஜூன் 4, வரலாறு மாறும்!
- குறிச்சி என்பது?
- பரப்புரை பயணக் காட்சி - பாசிசம் வீழ்வதற்கான சாட்சி
- எச்சங்களிலான நிலம்
- ஜன நாயகமா? பண நாயகமா?
- கருஞ்சட்டைத் தமிழர் மே 04, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- ‘குடிஅரசு’க்கு வயது 100