elephant_250கம்பீரமாக
நடந்து வந்து
கையை நீட்டி
பிச்சை கேட்டது யானை..!
 
பிச்சை பெற்றதும்
பெருமை குலையாமல்
வழங்கியவனுக்கே
ஆசி வழங்கியது!
 
அதன் நடையில்
ஒரு போலிச்சாமியாரின்
வாழ்க்கை தெரிந்தது..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It