
தூய்மைப்படுத்தினேன்
உன் கழிவுகளையெல்லாம்
அப்புறப்படுத்தினேன்
அழுக்கேறிய
உன் உடைகளை
துவைத்து சுத்தப்படுத்தினேன்.
தலைமயிரை
வெட்டிச் சிரைத்து
சீர்படுத்தி
நைந்து, பிய்ந்துப்போன
உன் செருப்பை
ஒட்டித் தைத்து
ஒழுங்குபடுத்தினேன்
உன் பசிக்காகவே
உழுதேன், விதைத்தேன்,
அறுவடையும் செய்தேன்
நீ மானங்காக்க வேண்டியே
துணியும் நெய்தேன்.
இவையாவும் உனக்காகவே
செய்தேன்
நீ எனக்காக
என்ன செய்தாய்
தீட்டென்று
ஒதுக்கியதைத்தவிர.
- இலாகுபாரதி (sa_