loverகடற்கரையெங்கும்
பரந்து கிடக்கும் உன்
சிரிப்பென்னும்
கிளிஞ்சல்களை
கைநிறைய அள்ளுகிறேன்!

காதல்எனும்
மணல் வீட்டை
திரும்ப திரும்ப
கட்டுகிறேன்
"இல்லை"எனும் அலைகள்
இனிவராது இருக்கலாம்!

பார்வையெனும்
சிறு குழிகள்
கரையோரம்
தோண்டுகிறேன்
கிடைப்பதென்னவோ
கண்ணீர்எனும்
அதே உப்புநீர்தான்!

மணல்வெளியெங்கும்
உன் பாதத்தின்
சுவடுகளையாவது
விட்டுசெல்
முன்னறிவிப்பின்றி
உன்போல்
போகமுடியாதென்னால் !

தியாகு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It