நேருக்கு நேராய்
முகம் பார்த்ததில்லை
எதிர் வீட்டுக்காரரை,
மனம் திறந்து பேசியதில்லை
நண்பர்கள் என்று நான்
சொல்லிக் கொள்பவர்களிடம்,
குடும்ப உறவுகளில்
புழிதி கிளம்பிவிட்டது
பேசுவதற்கு ஏதுமில்லை
சக பயணியிடம்
இப்படி
கழியும் பொழுதுகளில்
சக மனிதர்களை
நம்பாமல்
எந்த தேவதூதனுக்காய்
காத்துக்கிடக்கிறோம்....
- அ.முத்துக்கிருஷ்ணன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.