
நித்தம் புத்தாடைகள் உடுத்த,
உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
மகிழுந்தில் வலம்வர,
உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
தினமொரு நங்கையோடு தோழியெனக்
கூறித் தெருவெல்லாம் சுற்ற,
உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
வக்கிரங்களை வாய்ப்புகள்
கிடைக்கும்போது ஏவிவிட,
உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
வெளிநாடுகள் சுற்றி பணக்காரப்
பெண்ணை மணமுடிக்க,
உன்னைப் போல் எனக்கும் ஆசைதான்
தாய்மொழி தமிழேயானாலும்
ஆங்கிலத்தில் அலப்பறை செய்ய,
ஆனால்
செருப்புப் பாராத பாதங்களும்,
பசியில் கவனிக்கும் பாடங்களும்,
விடாமல் வாட்டும் வறுமையும்,
மழையில் குளமாகும் பள்ளிகளும்,
இறுதிவரைத் தரவேயில்லை
நான் மென்பொருள்
பொறியாளனாகும் வாய்ப்பை.
- உதயகுமார்.ஜி (nesan_