Happy manஇன்று முதல் முதலாக என்னை
அழைத்துச் சென்றனர் வெளியே
சூரிய வெளிச்சத்தில்.
வாழ்வில் முதன்முறையாக
திகைத்து நின்றேன்
வானம்
இவ்வளவு உயரம்
இத்தனை நீலம்
எத்தனை விரிவு !

பயபக்தியோடு உட்கார்ந்தேன்
தரையில் சம்மணமிட்டும்
முதுகை சுவற்றில் சாய்த்தும்.

இந்தக் கணத்தில்
வீழ்வதற்கு வலையொன்றும் இல்லை
போராட்டம் எதுவொன்றும் இல்லை
மனைவியும் இல்லை.

பூமியும் சூரியனும் நானும் தான்.

நான் மிக்க மகிழ்வோடிருக்கிறேன்.

மூலம் : Letters from a Man in Solitary, 1938
Nazim Hikmet. 

புதுவை ஞானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It