எனக்குப் பிடிப்பதெல்லாம்
உனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
உன்னை எனக்கு .
உனக்குப் பிடிப்பதெல்லாம்
எனக்குப் பிடிப்பதில்லை
என்றாலும் பிடித்திருக்கிறது
என்னை உனக்கு.
அவரவர்க்கு பிடித்தவற்றோடு
அனுதினமும் சதிராடி
நீர்க்கோல வாழ்வில் நிலைத்து
நெடும்பயணம் விழையும் மனது.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி (
கீற்றில் தேட...
நீர்க்கோல வாழ்வு...
- விவரங்கள்
- செல்வராஜ் ஜெகதீசன்
- பிரிவு: கவிதைகள்