18 படிகளையும் மூழ்கடித்து
முத்தமிட்டு
தழுவியபடி ஓடுகிறது
மண்ணுலகிற்கு கேடாய்
மக்காத நெகிழிக் குப்பைகளை
சேர்த்துக் கொண்டு...
ஆடி பிறந்தாலே கூடுதல்
பதற்றமுடன் ஆறுகள்.
தலை மூழ்கியும்
தலையில் அள்ளித் தெளித்தும்
திரும்புகிறார்கள்
தலைக்குள் மண்டிய குப்பைகளுடன்...
தாயைக் காப்பாற்ற வேண்டியவர்கள்
தாய்க்குக் கொள்ளி வைத்து விட்டுத்
தூக்கி எறிந்து போகிறார்கள்...
மனிதர்களைப் போல
கொடுத்ததைத் திருப்பித் தராமல்
போகும் வழக்கம்
நதிக்கும் கடலுக்கும்
இருந்ததில்லை.
- சதீஷ் குமரன்