காற்றைக் கீறி
இசை பிளியும்
மூங்கில்கீற்று ஸ்பரிசத்திற்கு
பயணப்படுபவளின்
துப்பட்டா வாசமுகர்ந்து
பின்தொடரும் அவ்வொருவன்,
இம்மழை இரவில்
அழகிய பாடலொன்றை
காமம்பொதித்து பதிவிட்டிருப்பான்,
அப்பெண் இசைகோர்த்திருக்கக் கூடும்!
- ஆறுமுகம் முருகேசன் (
கீற்றில் தேட...
நிரம்பி வழியும் இசை..!
- விவரங்கள்
- ஆறுமுகம் முருகேசன்
- பிரிவு: கவிதைகள்