கீற்றில் தேட...

இளவெயில் பகலை இதமாக
இழைத்து இழைத்து
இரண்டறக் கோர்த்து
புணர்ச்சியிலாடும் பட்டுப்பூச்சிகளை
தரிசிப்பதும் பெருவரம்தான்..
நீர்வரத்து அதிகமான பொழுதுகளில்
நதியோரக்கரைகளில்
பொக்கலின்கள் துருப்பிடித்துப் போக
மோகவெள்ளம் கரையுடைத்துப் பாயட்டும்
வரப்பெங்கும் காதல் மணிகள் சாயட்டும்
களஞ்சியங்கள் நிரம்பிட
கலவிதானே சூத்திரம்.

- சதீஷ் குமரன்