இந்த அன்பு ஏன்
இத்துணை போதையாயிருக்கிறது!

இந்த அன்பு ஏன்
இத்துணை வாதையாயிருக்கிறது!

இந்த அன்பு ஏன்
ஒருபோதும் போதுமானதாய் இருப்பதேயில்லை!

இந்த அன்பின் கலம் ஏன்
ஒரு போதும் நிறைவதேயில்லை!

இந்த அன்பு ஏன்
இத்துணை வசீகரமாய் இருக்கிறது!

இந்த அன்பு ஏன்
தேவர் கழுத்து மாலையென வாடுவதேயில்லை!

இந்த அன்பு ஏன்
இப்படி அலைக்கழிக்கிறது!

இந்த அன்பு ஏன்
இப்படி ஆசுவாசமாயிருக்கிறது!

இந்த அன்பு ஏன்
அலைகடலென சதா ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது!

இந்த அன்பு ஏன்
வழிப்போக்கனின் பெருஞ்சுமையை
இறக்கி வைக்க காத்துக்கிடக்கிற
சுமைதாங்கி கல்லென இருக்கிறது!

இந்த அன்பு ஏன் உனைக்கண்டதும்
பாசப்பெருங்காடென பற்றியெரிகிறது!

- இசைமலர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.