உனக்கான என்
வார்த்தைகள்
மொழி பெயர்த்தாலும்
மௌனமாகவே
இருந்து விடுகிறது......
என்னிலிருந்து
என்னையே பிரிக்கும்
யுக்தி தெரிந்தவன் நீ
மட்டுமாகவே
இருக்கிறாய்........
உனக்கு மட்டும்
புரிந்து விடுகிறது
என் தேவைகளின்
நீளமும் அவசியமும்
என்னவென
சில நேரங்களில்
புரியாமலும்.....
என்னை விட்டு நீ
விலகி நிற்பதும்
ஒருவித
நேசமாகவே இருக்கலாம்.....
என் மௌனம்
உடைக்க மலையை
தகர்க்கிறாய் - உன்
கண் அசைவில்
கரைவேன் இப்பதுமை
என தெரியாத
அப்பாவியாக......
பின்னொரு நாளில்
இன்னொரு
பிரபஞ்சத்திற்குள்
புரட்டிப் போடுவோம்
நம் நேசத்தையும்
முடிந்தால்.......
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- ஆனந்தி ராமகிருஷ்ணன்
- பிரிவு: கவிதைகள்