prabakaran 385என் மரணம்
நிகழ்ந்து விட்டதாக
என் எதிரிகள் தான்
தொலைக்காட்சியில்
முதலில் அறிவித்தார்கள்
ஒரு பிணத்தின்
கழுத்தருகே
என் முகத்தையும்
வைத்துக் காட்டினார்கள்
எனக்கு
அந்நியமானவர்கள் முதல்
அன்னியோன்னியமானவர்கள் வரை
அனைவருமே
என் மரணத்துக்கு
இரங்கல் தெரிவித்தார்கள்
என் மரணத்தை
அவர்கள்
உள்ளூர விரும்பியிருக்கிறார்கள்
என் மனத்தின்
அடியாழத்தில்
ஏதோவோர் ஓரத்தில்
ஒரு சிறு நம்பிக்கையின்
கீற்று
நான் மரணிக்கவில்லையென்று
சொல்கிறவரை
என் மரணத்தை
எப்படி நான் நம்ப முடியும்.
என் அடையாளம்
அவன்.
அவன் வேறு
நான் வேறோ?

எழுநூறு கோடி மனிதர்கள்
இருப்பதாய் நம்பும்
கடவுள்
இருக்கிறாரா என்று
எப்படி சந்தேகிப்பதில்லையோ
அப்படியே
எட்டு கோடி தமிழர்கள்
நம்பும்
ஒரு மனிதன்
இருப்பதை நாங்கள்
சந்தேகிப்பதில்லை.

Comments

2 comments

2
tamil dasan
"Edho oru orathil nambikkayin KEETRU" indha vasagame podhum anney ulaga thamilargalin manasukkul yuir nadiyaga thopul kodi uravugalai kakka kathu kondirukira sakthiyaga thamilargalin ovvoru moochilum kalanthu irukum avar vegu viraivaga mugam kaatuvar .........annan epo saavan thinnai epo kali agum enbathai pola avar illa illa nu solli avarku bathil nanga nu arasiyal seiyum pedigalai vida aal manasil avarai vidhaithu andrada thevaigalukai odum enpondravargal evalavo mel nu niyaya padutha virumbala..........kadavul irukara nu theriyathu theda arambicha thedite iruka vrndiyathu dhan inum kodi thalaimurai aanalum vidai kidaikathu.........but avar irukar irukar irukar nichayam varuvar idha sollum podhey evlo veeram vatuthu parungalen adhan avar.....
seyon yazhvaendhan
தன் உள்ளக் கிடக்கையை அள்ளிக் கொட்டிய தமிழ்தாசனுக்கு நன்றி.
வருவார் அவர் வருவார்
அதுவரை இருப்பாய் தமிழனே நெருப்பாய்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.