கடந்து போனவைகளை கையில் வைத்திருக்கிறேன்

பிரித்துப் பார்க்கும் ஆவலோடு
கைகளைப் பற்றிக்கொள்

நீங்கும் நிமிட இடைவெளியின் பயம்
விடைபெறலின் ரேகைக்குள் ஒட்டிக்கொண்டிருப்பதை
ஈரம் தோய ஒற்றியெடு

கையசைப்பில் வளரும் வாத்சல்யம்
பிரித்தனுப்பும் சுவாசத்தை
பொறுமை தீர விட்டிழு

ஏற்றுக்கொள்ளும் பக்குவமெங்கும்
முளைத்துவிட்ட வார்த்தைகளை
ஒவ்வென்றாய் பறி

மலர் மலராய் மெளனம்
நாரில் மணக்கும் உரையாடல்
கட்டி முடித்த காரணத்தை முடிச்சிடு

மாலையானதின் சாத்தியத்தில்
நிகழ்ந்தாக வேண்டிய சம்பிரதாயம்
வாடுவதற்குள்
இன்னொரு கழுத்தை நீ தேடவேண்டும்

- ரேவா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.