இவ்வாண்டின்
ஆகச்சிறந்த அரசியல் கவிதை
எதுவென்று
அறிந்து கொள்ள
ஆவல் பொங்குகிறதா தோழர்காள்?
ஆளரவமற்ற பொழுதில்
ஆற்றுமணலை
அதிகாரமாய் அள்ளிப் போன
சரக்குந்தை
சளைக்காமல் துரத்திச்சென்ற
ப்ரியத்துக்குரிய சினேகிதன்
பைரவனின்
"வள்!!!! வள்!!!" தானது!
இவ்வாண்டின்
ஆகச்சிறந்த அரசியல் கவிதை
எதுவென்று
அறிந்து கொள்ள
ஆவல் பொங்குகிறதா தோழர்காள்?
ஆளரவமற்ற பொழுதில்
ஆற்றுமணலை
அதிகாரமாய் அள்ளிப் போன
சரக்குந்தை
சளைக்காமல் துரத்திச்சென்ற
ப்ரியத்துக்குரிய சினேகிதன்
பைரவனின்
"வள்!!!! வள்!!!" தானது!