பச்சை மனிதன்
ஒரு நிழல் தேடி அலைகிறான்
பொய் முகம் கொண்ட
நிழலில் அமர்கிறான்
நிழல் அவனுக்கு
தன் வரலாற்றை சொல்லத்தொடங்கிற்று
வரலாற்றில் மயங்கியவன்
நிழலின் கதையை
தன் சம்பவங்களில் எழுதுகிறான்
சம்பவங்களில் கோர்க்கின்றான்
அழகை புனைவை
அதீத கற்பனையை
புனைவிலிருந்து எழுந்த ஒரு பெண்ணை
காதலித்து அங்கேயே குடியேறி விட்டான்
புனைவு என்பதை மீறி
அவன் நம்பத்தொடங்கி விட்டான்
அவன் புனைவுக்குள்
யாராலும் செல்ல முடியாதென்பதால்
கதை கேட்பிகள்
அவன் வாசலில் காத்திருக்கத் தொடங்குகிறார்கள்
ஆசிரமங்கள் பெருகி
நகரங்கள் புடைக்கின்றன.
கீற்றில் தேட...
வரலாற்றில் மயங்கியவன்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்