கீற்றில் தேட...

rain night 350

அடித்து ஊற்றும் மழை நேரத்தில்
கொஞ்சமும் வெட்கமின்றி
உடலை மட்டுமே நேசித்த தருணமொன்று
அபஸ்வரம் மீட்டுகிறது
எனக்கான பிரத்யேக சாபத்துடன்
விடிய காத்திருக்கிறது அதிகாலை
பழுத்த கொய்யாக்களின் சேதியை
அணிலிடம் மட்டுமே பகிர்கின்றன மரங்கள்
கனிக்காக நீண்ட கைகளில்
எச்சமிட்ட காக்கை ஒன்று
படபடக்க வைத்தபடி பறக்கிறது
சேர்ந்து விட்ட சாபங்களின் விமோசனத்திற்கான
விளக்கொன்றை ஏற்றி வைத்து விட்டு
வரங்கள் அடர்ந்த வனமொன்றில்
என் உயிரின் வேரை
எங்காவது ஊன்ற வேண்டும்.