rain night 350

அடித்து ஊற்றும் மழை நேரத்தில்
கொஞ்சமும் வெட்கமின்றி
உடலை மட்டுமே நேசித்த தருணமொன்று
அபஸ்வரம் மீட்டுகிறது
எனக்கான பிரத்யேக சாபத்துடன்
விடிய காத்திருக்கிறது அதிகாலை
பழுத்த கொய்யாக்களின் சேதியை
அணிலிடம் மட்டுமே பகிர்கின்றன மரங்கள்
கனிக்காக நீண்ட கைகளில்
எச்சமிட்ட காக்கை ஒன்று
படபடக்க வைத்தபடி பறக்கிறது
சேர்ந்து விட்ட சாபங்களின் விமோசனத்திற்கான
விளக்கொன்றை ஏற்றி வைத்து விட்டு
வரங்கள் அடர்ந்த வனமொன்றில்
என் உயிரின் வேரை
எங்காவது ஊன்ற வேண்டும்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.