man 208

உன்னைச் சந்திப்பதற்கான அனுமதியோடு
அகாலங்கள் கதவுகளான
தேசத்திலிருந்து வந்திருக்கிறேன்

குறித்த நேரம் வரும் வரை
காத்திருக்கச் சொல்கிற பணிப்பெண்ணை
கருணையோடு பார்த்துவிட்டு
செய்தித்தாள்களைப் புரட்டும்
கண்ணில்
காதல் தொற்றிக் கொலையெனும் சம்பவம்
நிகழ்ந்திடாதிருக்க பிரார்த்திக்கிறேன்

நேரம் வந்துவிட்டது
குறித்த நேரத்தில் அகாலத்தின் கதவை
திறந்துவிட வேண்டும்

- ரேவா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.