மழை குளித்துவிட்ட
மரங்களுக்கு
தலை துவட்டியது
காற்று
...............................
குழந்தைகள்
நனையவேண்டி
பொறுமை காத்துப்
பொழிந்தது மழை
பள்ளி விட்டதும்.
...............................
நீள அகலங்களை
அளந்தபடியே
ஓயாமல் அலைந்தது
கண்ணாடித் தொட்டிக்குள்
வாஸ்துமீன்.
...............................
பிணைத்திருக்கும் சங்கிலியை
பிய்த்து எறியும்
பலம் அறியா
யானையின் நிழலில்
உறங்கும் பாகனை
கடித்தது செவ்வெறும்பு...
...............................
நிலவைச்
சிறைபிடித்தது நதி
விடியும்வரை.
ஒளி பாய்ச்சி
உறக்கம் கெடுத்ததால்.
...............................
- மகிவனி (