grave 300சவக்குழியை தோண்டுபவன்
ஆழத்தை தீர்மானிப்பதில்லை
அவன் தீர்மானிப்பது
அங்கே வசிக்க வருகிறவனின்
செளகரியத்தை
அவன் அனுபவங்கள் வைக்க ஓர் அலமாரியை
பார்க்க வருகிறவர்களிடம் பேச
ஒரு சன்னலை
வலியை போட்டு மூடிவைக்க
ஒரு சின்ன அறையை
உட்புறமாக தாளிட்டுக்கொள்ள
ஒரு கதவை
திரும்பவும் கண்டெடுக்க முடியாத
ஒரு மறைவை
சவக்குழியின் ஆழம் தீர்மானிப்பதில்லை
உயிர்த்தெழலை.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.