1.

lady 357நீ
இல்லாமல்

டை
ந்
து

கி

க்
க்
கி
றே
ன்
பொறுக்கிக் கொள்கிறது கவிதை.

2.

பட்டப் பகலே
உதறிச் செல்கின்றபோது
கெட்ட இரவா
இருந்து கேட்கப்போகிறது?

3.

சமங்களாக
வேண்டியவையெல்லாம்
சவங்களாக.

4

வம்பழுக்கும் கும்பர்களை
வெளுத்துப் பாருங்கள்
இல்லையென்றால்
கொளுத்திப் போடுங்கள்.

5.

பிறைகளின் உருமாற்றம்
பிரச்சினை என்னவோ
நிலாக்களுக்குதான்.

6.

சவப்பெட்டிகள்
அவமரியாதையேற்கும்
சுமைதாங்கிகள் அல்ல

7.

காக்கைகள் செய்த
கலவரத்திற்கு
குயில்களா
குழம்பிக்கொள்வது?

8.

என்
வானத்தில் நட்சத்திர
விருந்தாளிதான்,
வீட்டுக்காரச் சூரியன் கிடையாது
நீ

9.

நீ
பக்கமிருந்து தும்முகிறாயா?
தூரமிருந்துதான்
தும்முகிறாயா?
சொல்
வார்த்தைகளெல்லாம்
வக்காலத்து வாங்கி
வரிசையில் கிளம்பிப் போகிறது
ஏதோவொரு திசையில்.

10.

எச்சியைத் துப்பினேன்
வாய் சுத்தமானது.

11

காமம் விசிலடிக்க
காதல் கைதட்டுகிறது


12.

மனதை அவிழ்
மண்ணில் யாவும் அமிழ்

13.

சில நாடகங்களுக்கு
பின்னணிக் குரல் கொடுப்பவர்களின்
குரலை நம்பவேண்டியதில்லை

14.

என்
கவிதைகளில் மூழ்கி
நீச்சலடித்து
கரையேறிச்செல்கிறாய்
முக்குளிப்பான் பறவையாய் நீ.

- வாலிதாசன், சென்னை-77 (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
கவிதாயினி ஷர்மி
அருமை தோழா :)
வாழ்த்துக்கள்

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.