கீற்றில் தேட...

sad man 351

 

நீண்ட ஒரு இரவில்
விழிகளின் வெளிச்ச எல்லையை மீறி
கண்கள் நிலைத்திருந்தன

சமாதானமற்ற வாக்குறுதிகள் மீறப்பட்டதன் வலி
இருள் அடைக்கும் வரை கேவுதல்
கேட்க முடியாது தொடர

பின்பொழுதின் விழிகள் வாசித்து அயர்ந்ததில்
உண்டான கருவளையத் தடம் மறைய
வட்ட வட்ட வெள்ளரியாய் நினைவின்
ஈரம் பரவுகையில்

நம்பிக்கையற்ற உன் மறு உரையாடல்
ஒத்திவைக்கிறது
என் விழியின் ஈரத்தை

- ரேவா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)