முந்தின வருசம்
பாண்டிப் பயலும்
பாத்திமாப் புள்ளையும்
ஊரைவிட்டே ஓடிப்போனார்கள்;
அதற்கும் முந்தின வருசம்  
மாயனும் முனியனும் 
வெட்டிக் கொண்டு 
உலகை விட்டே  ஓடிப்போனார்கள்;                  
இந்த வருசம் என்ன நிகழுமோ?                                    
திகிலில்
உறைந்திருக்கிறார்கள்  
ஊர் சனங்களும்
உலகாளும் அம்பிகையும்
அவளது பரிவாரங்களும்.                          

- ஸ்ரீதர்பாரதி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.