கேட்கத் தயங்கும் கேள்விகளும்
மொட்டவிழாத மெளனங்களுமாய்
நிறைந்து கிடக்கின்றன‌
கிழக்கில் நிழல் நீளும்
என் மாலையெங்கிலும்...

ஒளி மறைந்து
இருள் அடர்ந்து
நிசப்தங்களால் நிறைந்திருக்கும்
யாமங்கள் யாவிலும்
கேள்விகளால் துளைக்கப்பட்டு
மொட்டவிழத் துடிக்கின்றன‌
மெளனங்கள்...

இருள் கடலின்மேல்
ஒளிச்சாறைக் கரைத்தூற்றி
மெதுவாய்ப் புலரத் தொடங்குகிறது
பொழுது...

விடியலில் அடங்கும்
கேள்விகளுடன்
உறங்கிப் போகிறது மெளனம்...

மாலை வெயில் மங்குகையில்
மீண்டும் மெதுவாய்க்
கிழக்கில் நீளலாம்
கேள்விகள்...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.