*
நான் உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறேன்
நீ வேறெங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்
பேசுதலுக்கும் பார்த்தலுக்குமான
இடைவெளியை
நான் வெறிக்கத் தொடங்குகிறேன்
சொற்களற்றுப் போன இசையை உணர்ந்தவளாக
'ம்..?' - என்கிறாய்
நீ பார்த்துக் கொண்டிருந்தது
என் பேச்சைத் தான் என்பதாக
அது
ஓர் இசைக்குறிப்பைப் போல்
ஒலிக்கிறது
'ம்..' - என்ற உன் ஒலிக்குறிப்பை
இசைக் குறிப்பாக எழுதிப் பார்க்கிறேன்
அது
வேறொரு 'ம்..' ஆக
இசைக்கிறது
பேசுதல் பார்த்தலின் இணைப்புள்ளிகளில்
மீட்டுதல் அரங்கேறி உதிரக்கூடும்
இன்னுமொரு
'ம்..'
****
-- இளங்கோ (
கீற்றில் தேட...
சொற்களற்றுப் போன இசைக் குறிப்புகள்..
- விவரங்கள்
- இளங்கோ
- பிரிவு: கவிதைகள்