தலைக்கவசம் அணியாத  
இருசக்கர வாகனக்காரன்   
தண்ணீர் உந்து ஓட்டுநரின்
தாறுமாறான கைங்கர்யத்தால் 
திருஷ்டிபூசணி போல்  
தலை நசுங்கி உயிர்விட
காவு வாங்கிவிட்டதாக  
வீண்பழி விழுந்தது,
பனைமரத்துப் பட்சிகள் 
புளிச்சென  எச்சமிடும் 
பைபாஸ் கருப்பணசாமியின்  
வீச்சமெடுத்த உச்சந்தலை மீது!

- ஸ்ரீதர்பாரதி