ஈக்கள் மொய்க்கும் உன் இறந்த புன்னகையை
என் வாசல் மாக்கோலத்தில் கிடத்திச் செல்கிறாய்
ஓர் வானவில் காலத்தில் நீ பரிசளித்த
இளம் சிவப்பு முத்துமாலையை
விறைத்து வீங்கிய உன் புன்னகைக்கு
அணிவித்து அழகுபார்க்கிறேன்
இடுகாட்டு வழி எங்கும் இறைத்துச்செல்ல
நிறம் கப்பிய மலர்களை
நம் தேநீர் மேசைக்கு அடியிலிருந்து
சேகரித்து வந்திருக்கிறேன்
புதைத்தலைக் காட்டிலும் எரித்தல் நலம்
துடைத்தும் தீராத புகைமூட்டம்
கவ்விச் சூழும் இப்பாதை மறுத்து
எதிர் திசை நகரும்
ஒற்றை நிலவு.

****

- செ.சுஜாதா, பெங்களூர்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.