ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும், லெனினியம்
சென்றுநின் றோர்க்கும் தோன்றும், குறைவற
உலகின் மக்கள் இன்மையின் கொடுமையை
விலக்கும் வழியை உரைத்ததி னாலும்
மக்களின் மனமும் இயல்பாய்க் கொடுமையை
எக்கணமும் எதிர்க்கும் குணம்கொண் டதாலும்

(உலகில் உள்ள மக்கள் (இல்லாமையின்) கொடுமைகளை எதிர்க்கும் குணத்தை எப்பொழுதும் இயல்பாகவே கொண்டு இருப்பதால், இல்லாமையின் கொடுமைகளை நீக்கும் வழியை உரைத்த லெனினியக் கருத்தியல் அருகில் இருந்து பார்ப்போருக்கும் தெலைவில் இருந்து பார்ப்போருக்கும் தெளிவாகவே தெரியும்)

- இராமியா

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.