கீற்றில் தேட...

கற்றையாய் விழுந்து
ஒளி பரப்பிக்கொண்டிருந்தது
காலை வெயில்...

என் எண்ணங்களில்
எங்கேயும்
காலை குறித்த
வெளிச்சமில்லை...

காலையையும்
அத‌ன் வெளிச்சங்களையும்
மாலையையும்
அதன் இருளையும் தாண்டி
தனக்கான
வெளிச்சங்களையும் இருளையும்
எண்ணங்கள் தன்னியல்பில்
அணிந்துகொள்கின்றன...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)