என் கல்லூரி நாட்களின்
புகைப்படங்களை வைத்து
ஒவ்வொன்றாகப்
பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.

‘அம்மா இது யாரும்மா ?’

‘இது, அப்ப இது ?’

ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டே
வந்தேன் நான்

‘அம்மா இது யாரும்மா’
என்ற கேள்வி அங்கேயே
தொக்கி நின்றது

‘என்னம்மா மறந்துபோச்சா’
என்ற கேள்விக்கு
‘அது மட்டும் மறக்கவேயில்லை’
என்று கூற
ஏனோ எனக்குத் தோணவில்லை

- சின்னப்பயல் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

2 comments

2
chinnappayal
கருத்துக்கு நன்றி ராம்குமார்.
Ramkumar S
பெண் இன்னும் அடிமைதான். அவளுக்கென்று எந்த கருத்துச் சுதந்திரமும் இல்லை. தன் எதிர் காலத்தைத் தானே முடிவெடுக்கும் சுதந்திரம் அவளுக்கு இல்லை. உஙகள் குழந்தைகளுக்காவது அந்த சுதந்திரத்தை உறுதிப் படுத்துங்கள். நாளை அவளாவது மறக்காமல் மறந்து போகாமலிருக்கட்டும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.