என் கல்லூரி நாட்களின்
புகைப்படங்களை வைத்து
ஒவ்வொன்றாகப்
பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
‘அம்மா இது யாரும்மா ?’
‘இது, அப்ப இது ?’
ஒவ்வொருவராகச் சொல்லிக்கொண்டே
வந்தேன் நான்
‘அம்மா இது யாரும்மா’
என்ற கேள்வி அங்கேயே
தொக்கி நின்றது
‘என்னம்மா மறந்துபோச்சா’
என்ற கேள்விக்கு
‘அது மட்டும் மறக்கவேயில்லை’
என்று கூற
ஏனோ எனக்குத் தோணவில்லை
- சின்னப்பயல் (