கீற்றில் தேட...

1 .வேல் கம்பு அரிவாளோடு 
வீரமாய்க்  கிடந்தது 
வேட்டைக்குச் சென்ற பறை .

2 .பறையைத் தட்டும் குழந்தை 
பாட்டிக்கிழவி சுட்டுத் தரும் 
பன்றியின் ஈரலுக்காய் .

3 முதல் மனிதர்களின் 
முதல் கொண்டாட்டம் 
ஆதிப்பறை .

4 .அரசாணை வரிகள் 
காற்றில் பிரதிகளாய் 
பறையின் குரல்கள் .

5 .புளிச்சேப்ப தர்பாரில் 
தாபத்தில் மிருதங்கம் 
பரணியின் பறை கேட்டு .

6 இடிகளின் முழக்கம் 
திசையெல்லாம் அதிர்கிறது 
அனலில் காய்ச்சிய பறை .

7 உயிரற்றுக் கிடக்கிறது 
கழட்டிப்  போடப்பட்ட 
பறையின் தோல் .

8 இருந்த இசையை 
விசைதான் வெளிக்காட்டியது 
தோலிலும் கம்பிலும் .

9 எவ்வளவு வலிமை 
இந்த ஒப்பாரிக்கு...
பறையோடு இயைகிறதே !

10 தொண்டையைக் கனைத்து 
சரிசெய்துகொள்கிறது ஊதி
சீவாளிகளை மாற்றி மாற்றி .

11 ஒப்பாரியோடு சேர்ந்து 
தானும் அழுகிறது 
மழையில் நனைந்த பறை 

12   காற்றில் துடித்துவரும் 
பறையில் மயங்கியது குயில் 
சேர்ந்து பாடலாமா ....

13. பறை மட்டும் தனியாய் 
தனி வாசித்த 
மிருதங்கக்காரர் இறப்பில் .

14.  இரவல் தாளம் தேடாத 
தன்மானப் பாடகன் 
தட்டிப் பாடும் பறை .

15   குச்சி விரல்கள் 
பறையில் மீட்டின
பாலை யாழ் .

16 பறை ஒலித்த மேடை
மறுக்கும் நட்டுவாங்கம் 
எதிர் சங்கமம் .

17. சகல ராகங்களையும் 
தாங்கும் பறை 
உச்ச ஸ்தாயியில்.