ஆழ்துயில் ஆட்கொண்ட
பின்னிரவில் வந்த
பேயொன்று
தன்னைச் சாதியென்று
அழைத்துக்கொண்டது
இட்டபணி செய்ய
ஏவலாள் தேவையென்று
நியமன ஓலை நீட்டியது
கொலை தொழிலென்றும்
பகைமையும், பேதமையும்
ஊதியமேன்றும் வாக்களித்தது
பசியாறத் தசைகளும்
தாகம் தீர்க்கக் குருதியும்
இடைவேளைகளில்
தருவதாய் உறுதியளித்தது
வாழ்நாள் அடிமை சாசனத்தை
வைப்புநிதியாய்க்  கேட்டது
தூக்கம் கலைந்தெழுந்து
செபிக்கத் தொடங்கினேன்
பேயோட்டும் மந்திரத்தை
சாதியற!சாதியற!சாதியற!

- அதீதன்

Comments

1 comment

1
கி.சார்லஸ் [email protected]
நன்று...
அருமை...
நண்பரே...

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.