கீற்றில் தேட...

 # நான் தேடும் திசைகளில்
 நீ இருப்பதில்லை
 மழை எனக்கு பிடிக்கும் என்பதால்
 நீ எங்கோ
 நனைந்து கொண்டிருப்பாய்...!

 # நான் விழித்துக்கொள்வேன்
 உன் விரல்
 என் மௌனத்தை
 மெல்ல வருடும்போது...!

 # ஏதேதோ சொல்ல நினைத்து
 உன் பெயரை சொல்லி முடித்தேன்
 விழிகளால் வீழ்த்தி
 நகம் கடித்த நாண‌ங்களோடு
 வன்முறை துவங்குகிறது...!

 # ஒரு கணம்
 விழி உறைந்து
 நான் உடைந்து
 உன் சாயலில்
 எனைக் கடக்கும் யாரோ... !

 # நீ அழைக்கும் தூரத்தில்
 நான் இருக்கின்றேன்
 இன்னும்
 உன்னில் சாந்தம் பிறக்கவில்லை
 நான் செல்லும் வெளியைப் பார்
 மரணத்தின் வாசல் திறந்தே கிடக்கிறது... !

 # திறந்த விழியினூடே
 விரக்தி பெருகி
 வேர்த்து வழிகிறது நினைவு...!