சாதியின் பேராயுதம் கொண்டு
கட்டமைக்கப்படுகிறது
தீண்டாமையின் மூலதனங்கள்

சமூக வெளியும் பொதுச்சொத்துக்களும்
அரசியல் அதிகாரமும் பதவியும்
பரவலாக்கப்படவேண்டுமென
எப்போதெல்லாம்
கடைக்கோடி மனிதர்கள்
காலூன்றத் தொடங்குகிறார்களோ
அப்போதெல்லாம் எரிந்து கொண்டிருக்கும்
சேரிக்குடிசைகளும்
குடிசைக்குள் மனிதர்களும்…

எவற்றைப் பகிர்ந்தளிக்கட வேண்டுமென
கோரிக்கைகள் எழுப்பப்படுகிறதோ
அதன் மீது புனிதத்தின் கொடிகளும்
சாதியத்தின் வருணங்களும் வேரூன்றப்படுகின்றன

அநீதியை நிலைநிறுத்த
அரவாணிகள் வேசமணிந்து
புனிதத்தின் புழுக்களை
மேனிமுழுதும் அப்பிக்கொண்டு
சொறிந்துகொள்ளத் தோதுவாய்
பூணூலிட்டு அதிகாரத்தை கட்டியெழுப்புகிறார்கள்

யாருக்கும் தெரியா சமஸ்கிருத மொழியை
சர்வாதிகாரத்திற்கான ஆயுதமாய் கையிலேந்தி
பூமியெங்கும் சமஸ்கிருதமயமாக்கலாய்
முணுமுணுத்துச் செல்கிறார்கள்
பிறரையும் முணுமுணுக்கச் செய்துவிட்டார்கள்

யாரையெல்லாம் இழிவென
ஊருக்குப் புறத்தே ஒதுக்கி வைத்தார்களோ
யாரையெல்லாம் தீட்டெனக் கருதி
தீண்டாமைக் கொடுமைகளை ஏவி விட்டார்களோ
அவர்களும் புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள்
பார்ப்பனிய மேலாதிக்கத்தை
தன்னை புனிதப்படுத்திக் கொள்ளவதற்காக…

சமகாலச்சூழலில்
பூணூல் குடுமிகளின்றி மந்திரங்களின்றி
நடைபெறுவதில்லை
இல்ல விழாக்களும் ஊர்த்திருவிழாக்களும்…

நடந்து முடிந்ததாய் திருப்தியுற்று
புனிதமெனும் மனநோயை பரப்பிக்கொண்டிருக்கும்
அறிவியலுக்குப் புறம்பான அநீதிகளை
வேரோடு வெட்டியெறிந்திட
அறிவாயுத அரசியலைக் கையிலேந்தி
பிரளயமாய் கிளர்ந்தெழுந்து போராடட்டும்
வரும் தலைமுறையாவது…

- நீதிமலர்

Comments

4 comments

4
murugan
அநீதிகளை தகர்த்தெறிய அறிவாயுத அரசியலை கையிலேந்தி வரும் தலைமுறையாவது போராடட்டும் என்கிற வரிகளில் புரட்சியாளர் அம்பேத்கரின் சாயல் பிரளயமாய் வெளிப்பட்டிருக்கிறது. அருமை தோழர். வாழ்த்துக்கள்
pandian
அநீதியை நிலைநிறுத்த
அரவாணிகள் வேசமணிந்து
புனிதத்தின் புழுக்களை
மேனிமுழுதும் அப்பிக்கொண்டு
சொறிந்துகொள்ளத் தோதுவாய்
பூநூலிட்டு அதிகாரத்தை கட்டியெழுப்புகிறார்கள் எந்த உடல் அலங்காரத்தைக் காட்டி மற்ற மனிதர்களிடமிருந்து தன்னை உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தார்களோ அந்நிலையை அடித்து தரைமட்டமாக்கிவிட்டீர்கள். இதை விட ஒரு விமர்சனத்தை வேறு யாராலும் வைக்கமுடியாது. நல்லாருக்கு
soosai fernando norway
அறிவாயுத அரசியலைக் கையிலேந்தி
பிரளயமாய் கிளர்ந்தெழுந்து போராடட்டும்
வரும் தலைமுறையாவது…

கெட்டுப்போன இத்தலை முறையை விட்டுத்தொலைத்து
கெட்டுப்போகா இனி வரும் தலைமுறை என்று எண்ணிநினைத்து
விட்டுப்போகா அதன் போர்க்குணம் அது ஏந்தும் அறிவாயுதம்
என்கிறார் மிக ஆழமாக ஆணித்தரமாக.

எமது வாழ்த்துக்கள்
சூரியன்
வாழ்த்துக்கள் !! வழக்கறிஞர் அவர்களே!! அதிகம் அதிகம் எதிர்பார்க்கிறோம் உங்களிடம்!!! உங்கள் எழுத்துக்களில் சமூக நீதி தெரிகிறது.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.