இருள் விலகும் வேளையில்
முதுகில் செந்நிற இறகுகள்
அவை மழைக் காலத்தின்
தூர தேசத்து விருந்தாளிகள்
மெட்ரோ ரயிலின்
புலம்பெயர் பணியாளர்கள்
அந்த ஈசல்களின்
உறவு என சொல்ல
மழையைத் தவிர யாருமில்லை

- பகல்நிலவன்