கடிகாரத்தின் முட்களால்
காயப்படுத்தப்படாத
ஆடுகளின் காலம் அலைகிறது
மேய்ச்சல் நிலத்திற்கும்..
பட்டிக்குமிடையே
அவை எழுப்பும் ஒற்றைச் சப்தத்தினூடாய்.
 
மேய்க்கும் இடையனின் காலம்
கடவுளால் காயப்படுத்தப்பட்டுவிட...
மேய்ச்சல் நிலங்களுக்கு வெளியே
தனது கனவுகளைப் புதைத்தவன்..
திரியும் மேகங்களில் உறங்கிக் கொள்கிறான்
ஆடுகளைத் தவிர்த்தபடி.
 
தழை விரும்பும் ஆடுகளுக்குக்
கிடைத்துவிடுகின்றன
மேய்ப்பவனுக்கு மறுதலிக்கப்பட்ட உணவு.

எப்பொழுதும் அந்தியில்
எண்ணிப் பார்க்கையில்-
பட்டிக்குத் திரும்பும்
ஆடுகளின் எண்ணிக்கையில்
ஒன்று கூடுதலாகி விடுகிறது....

வாழ்வின் கணிதத்தைத்
தவறாக்கியபடி.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.