raindrop

காற்றின் நீர்த்திவலைகளை
தன்னிடமாய் ஈர்த்துக்கொண்டது
மேகம்...

இருள‌த்தொடங்கியது
வானம்....

சில்லென்ற‌ காற்று
ம‌ர‌த்தின் த‌லையை
மெதுவாய்க்
கலை‌த்துவிட்ட‌து...

கொட்டித் தீர்த்தது
மேகம்...

மரத்தின் கூரையின்வழியே
ஒழுகிக்கொண்டிருந்தது
ம‌ழை ...

நனைந்துவிடாதபடி
கவனமாய்
மிக கவனமாய்
கதவருகே நின்றபடி
மழையை
ரசித்துக் கொண்டிருந்தேன்...

என்றாலும்
சில துளிகள் என்மேல்
தெறிக்கத்தான் செய்தன...

தெறித்த துளிகளை
என்னால் ரசிக்காமலிருக்க
முடியவில்லை...

சிறிது நேரத்தில்
இருளத்தொடங்கியது
என் வானம்...

என்னுள்
ஒழுகத்தொடங்கியிருந்தது
மழை...

- த‌னி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

1 comment

1
Guest
அழகு

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.