காணாமற் போனவன் குறித்து
புகார் தருகையில்
கேட்டார்கள் ....
அவன் என்ன ஆடை உடுத்தியிருந்தான்?
அது நீலத்தின் சாயலா?
பச்சையின் சாயலா?
கோடு-நீலத்தில் பச்சையா?
பச்சையில் நீலமா?
அதை அணிந்து
அவர் பார்த்தார்-
மாற்றிப் போனானோ...?
அவன் காணாமற் போனது...
அப்போதா?-எப்போதோவா?
சுழலும் கேள்விகளின்
விடை மனதிற் படியாமல்
திறந்த பேனாவோடு
அமர்ந்திருக்கும் தந்தைக்கு
நீங்கள் உதவ முடியுமா?
அந்தப் பேனாவின்
மை
உலர்ந்து கொண்டிருக்கிறது.
- உமா மோகன் (